சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

10 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் "மலர்தலை உலகின் மாயிருள் துமியப் பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய பெரும்பெயர்க் கடவுளிற் கண்டு கண்இருள் தீர்ந்து அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி" மயக்கம் தெளிதல் என்பதை உட்கோளாக அமைத்து ஆய்வதற் கென அமைத்துக் கொடுக்கப் பெற்ற நூலே சிவஞானபோதம் என வரையறுத்தது. எனவே, பொறுத்தற்கியலாத துன்பச் சுமையாம் இவ்வுடலின் கண்ணே ஆன்மாவை ஆராய்ந்து காணுதல் வேண்டும் என்பது முதற்படி. ஆன்மாவை நாடுதலுடன் வேறு சில ஆய்வு களும் அமையும் என்பதும் காட்டப் பெற்றது. எனவே அத்தகைய ஆய்வுக்குச் சிவஞானபோதம் துணை செய்யும் என்பது சிறப்புப் பாயிரம் தந்த செய்தி. அடுத்த நிலையில், குறிப்பிடப் பெறும் செய்தி மிக முக்கிய மானது. அது வரலாற்றுப் பெருமை. முன்பொருமுறை இந்நூல் கொண்டே நந்தியெம்பெரு மானுக்கு மலைவு தீர்த்தருளியிருக்கிறார் ஒரு நல்லாசிரியர் என்பதை உள்ளீடாகக் கொண்ட மங்கல வாழ்த்து கல்லால் நிழன்மலை வில்லார் அருளிய பொல்லார் இணைமலர் நல்லார் புனைவரே என அமைகிறது. பொல்லாப் கல்லால மரத்தின் நிழலில் மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமான் அருளுவதற்காக, பிள்ளையாரின் இரட்டைத் திருவடிகளை நல்லார் தம் தலைக்கணியாக்கொள்வர் என்பதே உரை. இதனுள் "மலைவில்லார்' என்பதற்குரிய பொதுவான உரையை - மலையை வில்லாக உடையவர் என்ற உரையை அமைக்காமல், மலைவை இல்லையாகச் செய்தார் எனவும், மலைவு இன்மையே அவர் தன்மை எனவும் சிவஞான முனிவர் உரைவரை தலின் நோக்கத்தை உணர்தல் வேண்டும். நந்தியெம்பெருமானுக்கு மலைவை இல்லையாகச் செய்தார் என்பதால் அருளாளர்; நந்தியெம்பெருமான் கேட்பதற்கு முன்ன
10 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் மலர்தலை உலகின் மாயிருள் துமியப் பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய பெரும்பெயர்க் கடவுளிற் கண்டு கண்இருள் தீர்ந்து அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி மயக்கம் தெளிதல் என்பதை உட்கோளாக அமைத்து ஆய்வதற் கென அமைத்துக் கொடுக்கப் பெற்ற நூலே சிவஞானபோதம் என வரையறுத்தது . எனவே பொறுத்தற்கியலாத துன்பச் சுமையாம் இவ்வுடலின் கண்ணே ஆன்மாவை ஆராய்ந்து காணுதல் வேண்டும் என்பது முதற்படி . ஆன்மாவை நாடுதலுடன் வேறு சில ஆய்வு களும் அமையும் என்பதும் காட்டப் பெற்றது . எனவே அத்தகைய ஆய்வுக்குச் சிவஞானபோதம் துணை செய்யும் என்பது சிறப்புப் பாயிரம் தந்த செய்தி . அடுத்த நிலையில் குறிப்பிடப் பெறும் செய்தி மிக முக்கிய மானது . அது வரலாற்றுப் பெருமை . முன்பொருமுறை இந்நூல் கொண்டே நந்தியெம்பெரு மானுக்கு மலைவு தீர்த்தருளியிருக்கிறார் ஒரு நல்லாசிரியர் என்பதை உள்ளீடாகக் கொண்ட மங்கல வாழ்த்து கல்லால் நிழன்மலை வில்லார் அருளிய பொல்லார் இணைமலர் நல்லார் புனைவரே என அமைகிறது . பொல்லாப் கல்லால மரத்தின் நிழலில் மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமான் அருளுவதற்காக பிள்ளையாரின் இரட்டைத் திருவடிகளை நல்லார் தம் தலைக்கணியாக்கொள்வர் என்பதே உரை . இதனுள் மலைவில்லார் ' என்பதற்குரிய பொதுவான உரையை - மலையை வில்லாக உடையவர் என்ற உரையை அமைக்காமல் மலைவை இல்லையாகச் செய்தார் எனவும் மலைவு இன்மையே அவர் தன்மை எனவும் சிவஞான முனிவர் உரைவரை தலின் நோக்கத்தை உணர்தல் வேண்டும் . நந்தியெம்பெருமானுக்கு மலைவை இல்லையாகச் செய்தார் என்பதால் அருளாளர் ; நந்தியெம்பெருமான் கேட்பதற்கு முன்ன