சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

முனிவர் காட்டிய பொதுமை அளவை மேயே தாமே வெளிப்பட்டுவந்து அருள் மயமான மரத்தின் கீழ் இருந்தார் எனவும் விளக்கம் அமைத்துக் கொள்ள வேண்டும். அருளாளராய் நின்ற அவரும் சிவஞானபோதம் என்ற இந்நூலாலே மலைவை இல்லையாகச் செய்தார் எனவும் கொள்ளல் வேண்டும். 11 கல்லாலின் கீழமர்ந்த பெருமானை, மலைவின்மை என்ற பண்புடையவர் என நேர்நிறுத்தி விளக்காமல், நந்தியெம் பெரு மானுக்கு மலைவை இல்லையாகச் செய்தார் என விளக்குவதன் நோக்கம் என்ன? நேர்நின்று சுட்டியறியப்பெறான்; சார்பு காரண மாக அவனது தடத்தலக்கணம் அறியப்பெறுகிறது. சிவஞான முனிவர் சித்தாந்தசைவத்தின் கொள்கையாக 'உலகத் தத்துவ அரங்குக்கு வழங்கும் அளவை இயல் நெறியானது மலைதல் இன்மை. ஒன்றுடன் ஒன்று எதிர்நின்று மோதுதல் என எதுவும் இல்லை. ஒன்றுடன் ஒன்று அடங்கியும் அடக்கியும் இணைந்து நின்று விடுதல்; மலைதல் இன்மையாக நின்று விடுதல் என்பதே சித்தாந்த சைவத்தின் அளவையியற் கொள்கையாக அமைத்துக் காட்டுகின்றார். 1. இருட்கேட்டிற்கும் நிருவிகற்பம் சவிகற்பம் என்னும் இரு வகைக் காட்சிக்கும் ஞாயிறு இன்றியமையாதது; மலத்தீர்விற்கும் ஆராய்ச்சி அநுபூதி என்னும் இருவகை உணர்வினுக்கும் இந்நூல் இன்றியமையாதது. 2. ஞேயம் ஒன்றே பெரும்பெயர்க்குப் பொருள். நேய மொன்றே அஞ்செழுத்தின் பொருள். 3. ஆகம அளவை சார்பாகத் தலைநின்று வழியளவையால் ஆராய்ந்து பொதுவியல்பு துணிதல்; பெரும்பெயர்ப்பொருளே சிறந்தெடுத்தோதும் ஆகம அளவை சார்பாகத் தலை நின்று அழுந்தியறிதல்; அதுவே திருவருள் கண்ணாக அநுபூதியிற் கண்டு சிறப்பிலக்கணம் உணர்தல். 4. பெத்தத்தில் நின்ற நிலைபற்றிக் கூறுதல் பொதுவியல்பு; முத்தியில் நின்ற நிலைபற்றிக் கூறுதல் சிறப்பியல்பு. 5. ஆகமங்களில் இருவகைப் படுத்துக் கூறுவது, ஆன்மாக்கள் தத்தமக்குரிய சோபான முறையால் அறிந்து வருந்தன்மைக் கேற்பத் தூலாருந்ததி நியாயமாக உணர்த்துதல்.
முனிவர் காட்டிய பொதுமை அளவை மேயே தாமே வெளிப்பட்டுவந்து அருள் மயமான மரத்தின் கீழ் இருந்தார் எனவும் விளக்கம் அமைத்துக் கொள்ள வேண்டும் . அருளாளராய் நின்ற அவரும் சிவஞானபோதம் என்ற இந்நூலாலே மலைவை இல்லையாகச் செய்தார் எனவும் கொள்ளல் வேண்டும் . 11 கல்லாலின் கீழமர்ந்த பெருமானை மலைவின்மை என்ற பண்புடையவர் என நேர்நிறுத்தி விளக்காமல் நந்தியெம் பெரு மானுக்கு மலைவை இல்லையாகச் செய்தார் என விளக்குவதன் நோக்கம் என்ன ? நேர்நின்று சுட்டியறியப்பெறான் ; சார்பு காரண மாக அவனது தடத்தலக்கணம் அறியப்பெறுகிறது . சிவஞான முனிவர் சித்தாந்தசைவத்தின் கொள்கையாக ' உலகத் தத்துவ அரங்குக்கு வழங்கும் அளவை இயல் நெறியானது மலைதல் இன்மை . ஒன்றுடன் ஒன்று எதிர்நின்று மோதுதல் என எதுவும் இல்லை . ஒன்றுடன் ஒன்று அடங்கியும் அடக்கியும் இணைந்து நின்று விடுதல் ; மலைதல் இன்மையாக நின்று விடுதல் என்பதே சித்தாந்த சைவத்தின் அளவையியற் கொள்கையாக அமைத்துக் காட்டுகின்றார் . 1. இருட்கேட்டிற்கும் நிருவிகற்பம் சவிகற்பம் என்னும் இரு வகைக் காட்சிக்கும் ஞாயிறு இன்றியமையாதது ; மலத்தீர்விற்கும் ஆராய்ச்சி அநுபூதி என்னும் இருவகை உணர்வினுக்கும் இந்நூல் இன்றியமையாதது . 2. ஞேயம் ஒன்றே பெரும்பெயர்க்குப் பொருள் . நேய மொன்றே அஞ்செழுத்தின் பொருள் . 3. ஆகம அளவை சார்பாகத் தலைநின்று வழியளவையால் ஆராய்ந்து பொதுவியல்பு துணிதல் ; பெரும்பெயர்ப்பொருளே சிறந்தெடுத்தோதும் ஆகம அளவை சார்பாகத் தலை நின்று அழுந்தியறிதல் ; அதுவே திருவருள் கண்ணாக அநுபூதியிற் கண்டு சிறப்பிலக்கணம் உணர்தல் . 4. பெத்தத்தில் நின்ற நிலைபற்றிக் கூறுதல் பொதுவியல்பு ; முத்தியில் நின்ற நிலைபற்றிக் கூறுதல் சிறப்பியல்பு . 5. ஆகமங்களில் இருவகைப் படுத்துக் கூறுவது ஆன்மாக்கள் தத்தமக்குரிய சோபான முறையால் அறிந்து வருந்தன்மைக் கேற்பத் தூலாருந்ததி நியாயமாக உணர்த்துதல் .