சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

14 20. சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம் i "வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள் வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள் ஆதிநூல் அநாதி அமலன் தருநூல் இரண்டும் ஆரணநூல் பொது சைவம் அரும் சிறப்பு நூலாம் நீதியினால் உலகர்க்கும் சத்திநி பாதர்க்கும் நிகழ்த்தியது நீள்மறையின் ஒழிபொருள் வேதாந்தத் தீதில் பொருள் கொண்டுரைக்கும் நூல் சைவம் பிறநூல் திகழ் பூர்வம் சிவாகமங்கள் சித்தாந்த மாகும்" இவை தூலாருந்ததி முறைமைபற்றிக் கூறுதலின் இரு பகுதிப் பட்டது, என்பதே சிவஞான முனிவர் கருத்து. மேலே காட்டப்பெற்றவைகள் சிவஞானமாபாடியத்தின் சிறப்புப் பாயிரம் பகுதியில் சிவஞான சுவாமிகள் எடுத்துக் காட்டப் பெற்றவைகளின் குறிப்புக்களே. மேலும் பல செய்திகள் காட்டப் பெற்றிருப்பினும் விரிவஞ்சிய நிலையில் சுருக்கம் தரப்பெற்றது எனவே, சிவஞானமுனிவர் அளவை நெறிநின்று 'மலை வின்மை' என்பதைப் பொதுவகையில் கொள்கை நிறுவுதலுக்குரிய அளவையாகக் கொள்ள வேண்டும் என்று கொண்ட போதிலும், முரண்பாடுகளாக முன்னோர் கருதிய எல்லாவற்றையும் எடுத்துக் காட்டி, அனைத்து மூலங்களையும் இணைத்துப் பொருள் கொள்ளும் வகையில் ஒருவகைப் பொதுமரபு ஒன்றை வகுத்துக் காட்டுகிறார் என்று கொள்ளலாம். அவ்வகையில் திருமுறை களையும் எடுத்துக்காட்டி, இதன் அடிப்படைப் பொருள் இன்னது, இதற்கு இவ்வாறு பொருள் செய்வதுதான் மலைவறப் பொருள் காணும் மரபாகும் என அமைத்துக் காட்டிய வகையில் தமிழகத் தில் பல்வேறு நூல்கள், உரைகள் ஆகியவைகளெல்லாம் கால மாற்றங்களாலும், புறச் சமயத்தவர் போக்கறு நிலை புரிந்தமை யாலும், பண்பாட்டு முறை பிறழ்ந்து படிக்கப்பெற்ற நிலைகளில் அவைகளுக்கெல்லாம் முன்னோர் மொழி மரபு ஒன்று உண்டென எடுத்துக் காட்டி, இப்பொருள் இச்சொலின் இவ்வாறு உயர்ந்தோர் செப்புவர் அப்படிச் செப்புதல் மரபே" என்ற நூற்பாவின் அடிப்படையில் நின்று தமிழகத்துச் சைவ, சாத்திர மரபு முறை ஒன்றை வகுத்தமைத்து, தமிழகப் பண் பாட்டின் தனிநிலைமையை வரையறை செய்துவைத்தார் எனக்
14 20 . சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம் i வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள் வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள் ஆதிநூல் அநாதி அமலன் தருநூல் இரண்டும் ஆரணநூல் பொது சைவம் அரும் சிறப்பு நூலாம் நீதியினால் உலகர்க்கும் சத்திநி பாதர்க்கும் நிகழ்த்தியது நீள்மறையின் ஒழிபொருள் வேதாந்தத் தீதில் பொருள் கொண்டுரைக்கும் நூல் சைவம் பிறநூல் திகழ் பூர்வம் சிவாகமங்கள் சித்தாந்த மாகும் இவை தூலாருந்ததி முறைமைபற்றிக் கூறுதலின் இரு பகுதிப் பட்டது என்பதே சிவஞான முனிவர் கருத்து . மேலே காட்டப்பெற்றவைகள் சிவஞானமாபாடியத்தின் சிறப்புப் பாயிரம் பகுதியில் சிவஞான சுவாமிகள் எடுத்துக் காட்டப் பெற்றவைகளின் குறிப்புக்களே . மேலும் பல செய்திகள் காட்டப் பெற்றிருப்பினும் விரிவஞ்சிய நிலையில் சுருக்கம் தரப்பெற்றது எனவே சிவஞானமுனிவர் அளவை நெறிநின்று ' மலை வின்மை ' என்பதைப் பொதுவகையில் கொள்கை நிறுவுதலுக்குரிய அளவையாகக் கொள்ள வேண்டும் என்று கொண்ட போதிலும் முரண்பாடுகளாக முன்னோர் கருதிய எல்லாவற்றையும் எடுத்துக் காட்டி அனைத்து மூலங்களையும் இணைத்துப் பொருள் கொள்ளும் வகையில் ஒருவகைப் பொதுமரபு ஒன்றை வகுத்துக் காட்டுகிறார் என்று கொள்ளலாம் . அவ்வகையில் திருமுறை களையும் எடுத்துக்காட்டி இதன் அடிப்படைப் பொருள் இன்னது இதற்கு இவ்வாறு பொருள் செய்வதுதான் மலைவறப் பொருள் காணும் மரபாகும் என அமைத்துக் காட்டிய வகையில் தமிழகத் தில் பல்வேறு நூல்கள் உரைகள் ஆகியவைகளெல்லாம் கால மாற்றங்களாலும் புறச் சமயத்தவர் போக்கறு நிலை புரிந்தமை யாலும் பண்பாட்டு முறை பிறழ்ந்து படிக்கப்பெற்ற நிலைகளில் அவைகளுக்கெல்லாம் முன்னோர் மொழி மரபு ஒன்று உண்டென எடுத்துக் காட்டி இப்பொருள் இச்சொலின் இவ்வாறு உயர்ந்தோர் செப்புவர் அப்படிச் செப்புதல் மரபே என்ற நூற்பாவின் அடிப்படையில் நின்று தமிழகத்துச் சைவ சாத்திர மரபு முறை ஒன்றை வகுத்தமைத்து தமிழகப் பண் பாட்டின் தனிநிலைமையை வரையறை செய்துவைத்தார் எனக்