சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

முனிவர் காட்டிய பொதுமை அளவை கொள்ளுதல் அவர்தம் தொண்டின் நிலையினைப் படிநிலைகளில் வைத்து ஆய்வு செய்வதற்கு உரியதாகும் எனக் கொள்ளுதல் நன்றேயாம். is அவ்வாறே மெய்கண்டாரின் சிவஞானபோதத்தை நோக்க, சிவஞானசித்தியார் வழிநூலாகவும், உமாபதிசிவாசாரியார் அருளிய சிவப்பிரகாசம் சார்பு நூலாகவும் கொள்ளப் பெறுகிறது. வழிநூல் எனநின்ற சிவஞான சித்தியாரையும் சார்புநூல் என நின்ற சிவப்பிரகாசத்தையும் அவ்வந் நெறிகளில் நின்று விளக்கும் ஆசிரியர், மெய்கண்டாரின் நேர் மாணாக்கராக நின்று பாடங் கேட்டும் மெய்கண்டாரைப் பற்றிய சில முக்கிய மதிப்பீடுகளை அருளியும் நின்ற திருவதிகை மனவாசகங்கடந்தாரின் உண்மை விளக்கம் சிவஞானமுனிவரால் பெரிதும் போற்றப் பெறாமைக்கும், அவர் அமைத்துக் காட்டும் சுத்தவினா என்பதன் வரையறை பெற்ற விளக்கத்தையும் சிவஞான சுவாமிகள் பெரிதும் போற்றி யமையாமைக் குரிய காரணம் தெரியவில்லை. அவ்வாறே சிற்றம்பல நாடிகள் மெய்கண்டாரின் நேர்முக மாணாக்கராக அமைந்தவர். துகளறு போதம் என்னும் அரிய நூலை இயற்றிய அருளாளர். சிவஞான மாபாடியத்தில் துகளறு போதம் எடுத்தாளப் பெறுதல் உண்டு. ஆயினும், அந்நூலின் நுவலும் பொருட்டிறன் பற்றிய சிவஞானமுனிவரின் கருத்து அத்துணைத் தெளிவாக அமையவில்லை எனலாம்.
முனிவர் காட்டிய பொதுமை அளவை கொள்ளுதல் அவர்தம் தொண்டின் நிலையினைப் படிநிலைகளில் வைத்து ஆய்வு செய்வதற்கு உரியதாகும் எனக் கொள்ளுதல் நன்றேயாம் . is அவ்வாறே மெய்கண்டாரின் சிவஞானபோதத்தை நோக்க சிவஞானசித்தியார் வழிநூலாகவும் உமாபதிசிவாசாரியார் அருளிய சிவப்பிரகாசம் சார்பு நூலாகவும் கொள்ளப் பெறுகிறது . வழிநூல் எனநின்ற சிவஞான சித்தியாரையும் சார்புநூல் என நின்ற சிவப்பிரகாசத்தையும் அவ்வந் நெறிகளில் நின்று விளக்கும் ஆசிரியர் மெய்கண்டாரின் நேர் மாணாக்கராக நின்று பாடங் கேட்டும் மெய்கண்டாரைப் பற்றிய சில முக்கிய மதிப்பீடுகளை அருளியும் நின்ற திருவதிகை மனவாசகங்கடந்தாரின் உண்மை விளக்கம் சிவஞானமுனிவரால் பெரிதும் போற்றப் பெறாமைக்கும் அவர் அமைத்துக் காட்டும் சுத்தவினா என்பதன் வரையறை பெற்ற விளக்கத்தையும் சிவஞான சுவாமிகள் பெரிதும் போற்றி யமையாமைக் குரிய காரணம் தெரியவில்லை . அவ்வாறே சிற்றம்பல நாடிகள் மெய்கண்டாரின் நேர்முக மாணாக்கராக அமைந்தவர் . துகளறு போதம் என்னும் அரிய நூலை இயற்றிய அருளாளர் . சிவஞான மாபாடியத்தில் துகளறு போதம் எடுத்தாளப் பெறுதல் உண்டு . ஆயினும் அந்நூலின் நுவலும் பொருட்டிறன் பற்றிய சிவஞானமுனிவரின் கருத்து அத்துணைத் தெளிவாக அமையவில்லை எனலாம் .