சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

உண்மை பற்றிய கொள்கை திருவதிகை மனவாசகங்கடந்தார் தாம் இயற்றிய உண்மை விளக்கம் என்ற நூலில் அமைத்துக் காட்டும் கருத்தை இங்கே இணைத்துச் சிந்தித்தல் நலம் பயப்பதாம். 19 "பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதானந்தப் பொருளாம் மெய் காட்டும் மெய்கண்டாய் விண்ணப்பம் - பொய்காட்டா மெய்யா திருவெண்ணெய் வித்தகா சுத்தவினா ஐயா நீ தான்கேட் டருள்' என்பது உண்மை விளக்கம் என்ற நூலின் முதல் வெண்பா. இதனுள் மெய்கண்டார் பற்றிய விளக்கம் அமைவதை ஆய்ந்து காண வேண்டும். 'மெய்கண்டாய்' என விளித்த மனவாசகம் கடந்தார் அவரை மூன்று நிலைகளில் விளக்கம் செய்கிறார். 1. பொய்காட்டிப் பொய்யகற்றி மெய்காட்டும் மெய் கண்டாய் 2. போதானந்தப் பொருளாம் மெய்காட்டும் மெய்கண்டாய் 3. பொய் காட்டா மெய்யா என அமைக்கின்றார். மெய்கண்ட நிலைவேறு; மெய் காட்டும் நிலை வேறு. காட்டும் நிலையில் பொய்யைக் காட்டி, பின்னர் அது பொய் என்று கூறி அதனை நீக்கி, அதற்கு அப்பாற்பட்டது மெய் என்று கூறிக் காட்டுவது ஒருவகை. இது மெய்யை நேர் நிலையிற் காட்டாமல், பொய்யைக் காட்டி, பொய்க்கு மறுதலை யானது மெய் எனக் காட்டும் முறை. இரண்டாவதாக அமையும் முறை. இதிற் பொய்காட்டும் நிலை இல்லை எனினும், தான் கண்டவாறே போதம் எனவும் ஆனந்தம் எனவும் அப்பொருளை அனுபவத்தாற் காட்டுதல்; பொருளாற் காட்டாதொழிதல். மூன்றாம் நிலையானது, பொய்யைக் காட்டாமல், மெய் யாகவே தானிருப்பதன் மூலம் மெய்யைக் காட்டும் நிலை. மேலே குறிப்பிடப் பெற்ற மூன்று நிலைகளும் மெய்கண்டார் பிறருக்கு மெய்ப்பொருளைக் காட்டிய முறையே றிக் கண்ட முறை அன்று.
உண்மை பற்றிய கொள்கை திருவதிகை மனவாசகங்கடந்தார் தாம் இயற்றிய உண்மை விளக்கம் என்ற நூலில் அமைத்துக் காட்டும் கருத்தை இங்கே இணைத்துச் சிந்தித்தல் நலம் பயப்பதாம் . 19 பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதானந்தப் பொருளாம் மெய் காட்டும் மெய்கண்டாய் விண்ணப்பம் - பொய்காட்டா மெய்யா திருவெண்ணெய் வித்தகா சுத்தவினா ஐயா நீ தான்கேட் டருள் ' என்பது உண்மை விளக்கம் என்ற நூலின் முதல் வெண்பா . இதனுள் மெய்கண்டார் பற்றிய விளக்கம் அமைவதை ஆய்ந்து காண வேண்டும் . ' மெய்கண்டாய் ' என விளித்த மனவாசகம் கடந்தார் அவரை மூன்று நிலைகளில் விளக்கம் செய்கிறார் . 1. பொய்காட்டிப் பொய்யகற்றி மெய்காட்டும் மெய் கண்டாய் 2. போதானந்தப் பொருளாம் மெய்காட்டும் மெய்கண்டாய் 3. பொய் காட்டா மெய்யா என அமைக்கின்றார் . மெய்கண்ட நிலைவேறு ; மெய் காட்டும் நிலை வேறு . காட்டும் நிலையில் பொய்யைக் காட்டி பின்னர் அது பொய் என்று கூறி அதனை நீக்கி அதற்கு அப்பாற்பட்டது மெய் என்று கூறிக் காட்டுவது ஒருவகை . இது மெய்யை நேர் நிலையிற் காட்டாமல் பொய்யைக் காட்டி பொய்க்கு மறுதலை யானது மெய் எனக் காட்டும் முறை . இரண்டாவதாக அமையும் முறை . இதிற் பொய்காட்டும் நிலை இல்லை எனினும் தான் கண்டவாறே போதம் எனவும் ஆனந்தம் எனவும் அப்பொருளை அனுபவத்தாற் காட்டுதல் ; பொருளாற் காட்டாதொழிதல் . மூன்றாம் நிலையானது பொய்யைக் காட்டாமல் மெய் யாகவே தானிருப்பதன் மூலம் மெய்யைக் காட்டும் நிலை . மேலே குறிப்பிடப் பெற்ற மூன்று நிலைகளும் மெய்கண்டார் பிறருக்கு மெய்ப்பொருளைக் காட்டிய முறையே றிக் கண்ட முறை அன்று .