சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் மெய்கண்டார் மெய்யை எவ்வாறு கண்டார் என்பதை மன வாசகம் கடந்தார் கூறவில்லையாயினும் தாயுமானவர் "பொய்கண்டார் காணாப் புனிதம் எனும் அத்துவித மெய் கண்டான்” என்று குறிப்பிடுகின்றார். புனிதம் எனும் மெய்ப்பொருளைக் கண்டவர் மெய்கண்டார். புனிதம் என்பதே அத்துவிதம் என்ற சொல்லாலும் சுட்டப் பெறுகிறது. மனவாசகம் கடந்தார் 'உண்மை' என்றும், 'சுத்தம்' என்றும் சுட்டும் ஒன்றனை 'மெய்' என்ற சொல்லால் சுட்டவில்லை. 20 திருவதிகை மனவாசகம் கடந்தார் வாக்கிலிருந்து 'முழுமை' என நின்ற ஒன்றே உண்மை எனவும் சுத்தம் எனவும் கூறப் பெறுகிறது என அறியலாம். இங்கே பூமி முதலியன முழுமை நிலையில் விளக்கப் பெறுகிறது. ஏகதேசத்தை உணர்த்தி அதன் மூலம் முழுமையை ஆய்ந்தறியும் முறை பின்பற்றப்படவில்லை. எனவே, முழுமையை அறியும் ஆற்றல்மிக்க கருவியைத் துணை யாகப் பெற்று, முழுமையை முற்றாக அறிதல் என்ற முறை உண்மை விளக்கம் என்ற நூலின் ஆசிரியரால் அமைத்துக் காட்டப் பெறுகிறது. இனி, 'உண்மை' என்பதை மரபு முறையில் எவ்வாறு அறியவும் அறிவிக்கவும் செய்தார்கள் என்பதையும் இங்கே நாம் ணைத்துக் காணலாம். திருஞானசம்பந்தப் பெருமான் தம் தந்தையாரின் வேண்டு கோளுக்கிணங்க, தாம் பலவாகப் பாடிய பதிகங்களையெல்லாம் தொகுத்து நிறுத்தி அவற்றின் உட்பொருள் இன்னது எனச் சுருங்கிய வகையில் விளக்குவதற்காகத் திருவெழுகூற்றிருக்கை என்ற பதிகத்தை அருளிச் செய்கின்றார். ஒரு பாட்டே பதிகமாக அமைந்த பெருமையுடையது. எண்ணின் அடிப்படையில் உள் பொருள் இயல்பை உணர்த்த முற்பட்ட திருஞானசம்பந்தப் பெருமான் “இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்" என வரையறைப்படுத்தி, உள்ளதன் இயல்பை விளக்கிக் காட்டினார்.
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் மெய்கண்டார் மெய்யை எவ்வாறு கண்டார் என்பதை மன வாசகம் கடந்தார் கூறவில்லையாயினும் தாயுமானவர் பொய்கண்டார் காணாப் புனிதம் எனும் அத்துவித மெய் கண்டான் என்று குறிப்பிடுகின்றார் . புனிதம் எனும் மெய்ப்பொருளைக் கண்டவர் மெய்கண்டார் . புனிதம் என்பதே அத்துவிதம் என்ற சொல்லாலும் சுட்டப் பெறுகிறது . மனவாசகம் கடந்தார் ' உண்மை ' என்றும் ' சுத்தம் ' என்றும் சுட்டும் ஒன்றனை ' மெய் ' என்ற சொல்லால் சுட்டவில்லை . 20 திருவதிகை மனவாசகம் கடந்தார் வாக்கிலிருந்து ' முழுமை ' என நின்ற ஒன்றே உண்மை எனவும் சுத்தம் எனவும் கூறப் பெறுகிறது என அறியலாம் . இங்கே பூமி முதலியன முழுமை நிலையில் விளக்கப் பெறுகிறது . ஏகதேசத்தை உணர்த்தி அதன் மூலம் முழுமையை ஆய்ந்தறியும் முறை பின்பற்றப்படவில்லை . எனவே முழுமையை அறியும் ஆற்றல்மிக்க கருவியைத் துணை யாகப் பெற்று முழுமையை முற்றாக அறிதல் என்ற முறை உண்மை விளக்கம் என்ற நூலின் ஆசிரியரால் அமைத்துக் காட்டப் பெறுகிறது . இனி ' உண்மை ' என்பதை மரபு முறையில் எவ்வாறு அறியவும் அறிவிக்கவும் செய்தார்கள் என்பதையும் இங்கே நாம் ணைத்துக் காணலாம் . திருஞானசம்பந்தப் பெருமான் தம் தந்தையாரின் வேண்டு கோளுக்கிணங்க தாம் பலவாகப் பாடிய பதிகங்களையெல்லாம் தொகுத்து நிறுத்தி அவற்றின் உட்பொருள் இன்னது எனச் சுருங்கிய வகையில் விளக்குவதற்காகத் திருவெழுகூற்றிருக்கை என்ற பதிகத்தை அருளிச் செய்கின்றார் . ஒரு பாட்டே பதிகமாக அமைந்த பெருமையுடையது . எண்ணின் அடிப்படையில் உள் பொருள் இயல்பை உணர்த்த முற்பட்ட திருஞானசம்பந்தப் பெருமான் இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் என வரையறைப்படுத்தி உள்ளதன் இயல்பை விளக்கிக் காட்டினார் .