சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

உண்மை பற்றிய கொள்கை. "தம்மை உணர்ந்து தமை உடைய தன் உணர்வார் எம்மை உடைமை எனஇகழார் - தம்மை உணரார் உணரார் உடங்கியைந்து தம்முட் புணராமை கேளாம் புறன்" 23 என்பதே மெய்கண்டார் தம்முடைய சிவஞானபோத நூலின்கண் அமைத்துக் காட்டும் அவையடக்கம். இந்த அவையடக்க வெண்பாவினுள் 'தம்மை உணர்ந்து தமை உடைய தன் உணர்தல்' என ஒருவகை உணர்தல் நெறி பேசப் பெறுகிறது. தம்மை உணர்ந்து தமை உடைய தன் உணர்தல் என்ற முறையை முதலில் உணர்ந்து தெளிதல் வேண்டும். தம்மை ஒரு கூட்டுப்பொருள் என அமைத்து, உயிரை அடிமை எனவும், உடல் அமைப்பை உடைமை எனவும் இரண்டாக்கி நிறுத்துதல் வேண்டும். அடிமையும் உடைமையும் என நின்ற இருநிலைகள். இவ்வாறு தம்மை அடிமையும் உடைமையும் என நிறுத்திய போது, இரண்டையும் இணைத்ததாய், இரண்டையும் உடைமை கொண்டதாய், இரண்டற்கும் ஃபேறளிக்க வல்லதாய் அமைந்த மூன்றாவது ஒன்று தோற்றம் பெறும். அதுவே, தமை யுடைய தன் எனப்பெறும். எனக் உணர்தல் நெறியை இவ்வாறு வரையறை செய்தளித்த அவையடக்கம் 'உண்மை' பற்றிய கொள்கையைக் கீழ்க்கண்ட வாறு வரையறை செய்கிறது. உண்மை பற்றிய கொள்கையானது மூன்று தனிக்கூறுகளை முன்னிறுத்தி, பின் அவற்றை இணைத்து நின்ற முழுமைக் கூறு என நிற்கும் முறைமையுடையதாகிறது. உடங்குதல்- முரணுதல். முரணுதலுற்ற பல்வேறு கொள்கை களாக அமைந்தவைகள் அழிதலின்றி இயைந்து இருத்தல் முதல் நிலை. அடுத்த நிலையில், அவை தம்முள் ஒருவகை அக இணைப் பால் புணர்ந்து தழுவி முழுமை பெற்று இருத்தல். முரண்படும் தனிமைகள் முதலில் தனிநின்று, பின்னர் அவை தம்முள் இயைந்து நின்று, அடுத்தநிலையில் அவை தம்முள் அகநிலைப் புணர்வு பெற்று, அதனால் இணைந்து முழுமையுற்றுத் திகழ்தல். இது ஒருவகை உறுப்பமைதிக் கொள்கையை ஒத்தது எனக் கொள்ளவேண்டும்.
உண்மை பற்றிய கொள்கை . தம்மை உணர்ந்து தமை உடைய தன் உணர்வார் எம்மை உடைமை எனஇகழார் - தம்மை உணரார் உணரார் உடங்கியைந்து தம்முட் புணராமை கேளாம் புறன் 23 என்பதே மெய்கண்டார் தம்முடைய சிவஞானபோத நூலின்கண் அமைத்துக் காட்டும் அவையடக்கம் . இந்த அவையடக்க வெண்பாவினுள் ' தம்மை உணர்ந்து தமை உடைய தன் உணர்தல் ' என ஒருவகை உணர்தல் நெறி பேசப் பெறுகிறது . தம்மை உணர்ந்து தமை உடைய தன் உணர்தல் என்ற முறையை முதலில் உணர்ந்து தெளிதல் வேண்டும் . தம்மை ஒரு கூட்டுப்பொருள் என அமைத்து உயிரை அடிமை எனவும் உடல் அமைப்பை உடைமை எனவும் இரண்டாக்கி நிறுத்துதல் வேண்டும் . அடிமையும் உடைமையும் என நின்ற இருநிலைகள் . இவ்வாறு தம்மை அடிமையும் உடைமையும் என நிறுத்திய போது இரண்டையும் இணைத்ததாய் இரண்டையும் உடைமை கொண்டதாய் இரண்டற்கும் ஃபேறளிக்க வல்லதாய் அமைந்த மூன்றாவது ஒன்று தோற்றம் பெறும் . அதுவே தமை யுடைய தன் எனப்பெறும் . எனக் உணர்தல் நெறியை இவ்வாறு வரையறை செய்தளித்த அவையடக்கம் ' உண்மை ' பற்றிய கொள்கையைக் கீழ்க்கண்ட வாறு வரையறை செய்கிறது . உண்மை பற்றிய கொள்கையானது மூன்று தனிக்கூறுகளை முன்னிறுத்தி பின் அவற்றை இணைத்து நின்ற முழுமைக் கூறு என நிற்கும் முறைமையுடையதாகிறது . உடங்குதல்- முரணுதல் . முரணுதலுற்ற பல்வேறு கொள்கை களாக அமைந்தவைகள் அழிதலின்றி இயைந்து இருத்தல் முதல் நிலை . அடுத்த நிலையில் அவை தம்முள் ஒருவகை அக இணைப் பால் புணர்ந்து தழுவி முழுமை பெற்று இருத்தல் . முரண்படும் தனிமைகள் முதலில் தனிநின்று பின்னர் அவை தம்முள் இயைந்து நின்று அடுத்தநிலையில் அவை தம்முள் அகநிலைப் புணர்வு பெற்று அதனால் இணைந்து முழுமையுற்றுத் திகழ்தல் . இது ஒருவகை உறுப்பமைதிக் கொள்கையை ஒத்தது எனக் கொள்ளவேண்டும் .