சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

26 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் வாதி என எழுவகைச் சைவக் கொள்கை எடுத்துக் கூறி மறுக்கப் பெறுகின்றன. இவற்றுள் நிமித்த காரண பரிணாம வாதம் என்பதே சிவாத்வைத சைவம். அதனை அடுத்து நின்ற சைவ வாதம் என்பதே சுத்தசைவம், சுத்த சைவம் நுட்பப் பொருள் காரணம் ஒன்று மட்டுமே பற்றி வேறு வைத்து எண்ணப்பட்டதன்றி, கருத்து வகையாற் சித்தாந்த சைவத்தில் அடங்கிவிடும். எனவே, பாடாணவாதம், பேதவாதம், சிவசம வாதம், சிவசங்கிராந்த வாதம், ஈசுர அவிகார வாதம், சிவாத்வைத வாதம் என்ற ஆறுமே அகச்சமயம் எனநின்றன. உணராத இவ்வாறு, அகம், அகப்புறம்,புறம், புறப்புறம் என நால் வகையால் ஆறு ஆறு எனநின்ற இருபத்துநான்கு சமயங்களும், உடங்கியைந்து தம்முட் புணராமை என்ற காரணத்தால் 'உண்மை' என இணைந்து நிற்கும் அமைப்பைப் பெறாதனவாயின் என்று கொள்ள வேண்டும். அவ்வகையில் சித்தாந்த சைவம் உணர்ந்து தம்மை தமையுடைய தன் உணர்தல் என்பதை அறியும் நெறியாகவும், உடங்கியைந்து தம்முட் புணர்தல் என்பதை உண்மை பற்றிய கொள்கையாகவும் அமைத்து விளக்கம் கூறியது. இவ்வகையில் சித்தாந்தசைவத்தின் அறியும்நெறி, உண்மைபற்றிய கொள்கைகளை மெய்கண்டார் வழிநின்று வரை யறை செய்தமைத்த பெருமை மாதவச்சிவஞானசுவாமிகளையே சாரும் எனக் கொள்ள வேண்டும். இனி, 'உடங்கியைந்து தம்முட் புணர்தல்' என்ற கொள் கையை, மெய்கண்டார் சிவஞான போதத்து இரண்டாம் நூற்பா வில் அத்துவிதம்' என்ற சொல்லுக்குரிய பொருளை இன்னதென்று அறுதியிட்டுக் காட்டும் இடத்தில் எடுத்தெழுதி விளக்கியுள்ளார். அவையேயாய், தானேயாய் எனத் தனித்தனி நிறுத்திப் பொருள் செய்தமைத்த பின்னர், இரட்டுறமொழிதல் என்ற உத்தியின் அடிப்படையில் அவையேதானேயாய் என நிறுத்தி, மூவகை உறவு முறைகளையும் இணைத்துக் காட்டி விளக்கும் வகையில் 'உடங்கியைந்து தம்முட் புணர்தல்' என்ற கொள்கையை மூலமாக அமைத்தே சிவஞான சுவாமிகளின் உரை விளக்கம் அமைகிறது. தன்மையால் வேறான பொருள்கள் உடங்கியைந்து நிற்றலே பிரிவறும் அத்துவிதம்' எனப் பேசப் பெறுகிறது என்பனத எடுத்துக் காட்டி விளக்கு முகத்தால்,
26 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் வாதி என எழுவகைச் சைவக் கொள்கை எடுத்துக் கூறி மறுக்கப் பெறுகின்றன . இவற்றுள் நிமித்த காரண பரிணாம வாதம் என்பதே சிவாத்வைத சைவம் . அதனை அடுத்து நின்ற சைவ வாதம் என்பதே சுத்தசைவம் சுத்த சைவம் நுட்பப் பொருள் காரணம் ஒன்று மட்டுமே பற்றி வேறு வைத்து எண்ணப்பட்டதன்றி கருத்து வகையாற் சித்தாந்த சைவத்தில் அடங்கிவிடும் . எனவே பாடாணவாதம் பேதவாதம் சிவசம வாதம் சிவசங்கிராந்த வாதம் ஈசுர அவிகார வாதம் சிவாத்வைத வாதம் என்ற ஆறுமே அகச்சமயம் எனநின்றன . உணராத இவ்வாறு அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நால் வகையால் ஆறு ஆறு எனநின்ற இருபத்துநான்கு சமயங்களும் உடங்கியைந்து தம்முட் புணராமை என்ற காரணத்தால் ' உண்மை ' என இணைந்து நிற்கும் அமைப்பைப் பெறாதனவாயின் என்று கொள்ள வேண்டும் . அவ்வகையில் சித்தாந்த சைவம் உணர்ந்து தம்மை தமையுடைய தன் உணர்தல் என்பதை அறியும் நெறியாகவும் உடங்கியைந்து தம்முட் புணர்தல் என்பதை உண்மை பற்றிய கொள்கையாகவும் அமைத்து விளக்கம் கூறியது . இவ்வகையில் சித்தாந்தசைவத்தின் அறியும்நெறி உண்மைபற்றிய கொள்கைகளை மெய்கண்டார் வழிநின்று வரை யறை செய்தமைத்த பெருமை மாதவச்சிவஞானசுவாமிகளையே சாரும் எனக் கொள்ள வேண்டும் . இனி ' உடங்கியைந்து தம்முட் புணர்தல் ' என்ற கொள் கையை மெய்கண்டார் சிவஞான போதத்து இரண்டாம் நூற்பா வில் அத்துவிதம் ' என்ற சொல்லுக்குரிய பொருளை இன்னதென்று அறுதியிட்டுக் காட்டும் இடத்தில் எடுத்தெழுதி விளக்கியுள்ளார் . அவையேயாய் தானேயாய் எனத் தனித்தனி நிறுத்திப் பொருள் செய்தமைத்த பின்னர் இரட்டுறமொழிதல் என்ற உத்தியின் அடிப்படையில் அவையேதானேயாய் என நிறுத்தி மூவகை உறவு முறைகளையும் இணைத்துக் காட்டி விளக்கும் வகையில் ' உடங்கியைந்து தம்முட் புணர்தல் ' என்ற கொள்கையை மூலமாக அமைத்தே சிவஞான சுவாமிகளின் உரை விளக்கம் அமைகிறது . தன்மையால் வேறான பொருள்கள் உடங்கியைந்து நிற்றலே பிரிவறும் அத்துவிதம் ' எனப் பேசப் பெறுகிறது என்பனத எடுத்துக் காட்டி விளக்கு முகத்தால்