சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவரின் நட்பியலுரை கருதிப் போலும். தொகுப்பாயமைந்த போதிலும் ஸ்மிருதிகள் புராணங்கள் சான்றுகளைக் கொண்டதாக விளங்குவது, சுருதிச் சான்றுகளைக் கொள்ளாமையால் குறை யுடையதாகவே முடியும் என்று கருதிப் போலும், சுவாமிகள் சுருதிச் சான்றுகளை முன்னர் அமைத்து, அதனை நூலாக்கி, சிவதோத்திரமாலை என யாத்தேன் என்று கூறி, நூற்பயனும் கூறிமுடித்து நிறுத்துகிறார். ஆகியவைகளின் 314 அப்பைய தீட்சிதரின் அறுபது வடமொழிச் சுலோகங்களுக்கு அறுபது பாட்டுக்களை யாத்தமைத்த சிவஞானமுனிவர் முன்னர் ஏழுபாக்கள் அமைத்தார். அவைகளில் முதன் மூன்றும் உபநிடத் வாக்கியங்களின் விரிவாகப் பேரின்பகாரணன், முற்றுணர்வினன், தூயதன்மையன் எனநின்ற சிவன் பெருமைகளை விளக்கி நின்றன. அடுத்து நான்கு பாட்டுக்கள் சிவதத்துவ விவேகத்துக்குரிய பாயிரம் என அமைக்கப்பெற்றுள்ளன. இவை ஏழுபாட்டுக்களுக்கு அப்பால், அறுபது பாட்டுக்கள் அப்பைய தீட்சிதரின் சுலோகங்களின் தமிழாக்கம், இறுதிநின்ற மூன்றும், நூலின் பெயர், படித்தல், பயன் ஆகியவைகளை விளக்கி நின்றன. அவ்வகையில் ஒரு முழு நூலாக ஆக்கியதோடன்றி, அவற்றைத் தோத்திரமாக்கியும் அமைத்தபெருமை சிவஞான முனிவர்க்குண்டு. சிவபரத்துவத்தை எடுத்து மொழிந்தால் அது ஒருவகைத் தத்துவநூல். சிவஞான போதம் தத்துவநூல். அதனைக் கோயிலில் தோத்திரநூலாக அமைத்து, ஓதிப் பயன்பெறவேண்டும் என்று கொள்ள முடியாது. அப்பைய தீட்சிதரின் அறுபது சுலோகப் பொருளை வெற்று மொழி பெயர்ப்பாக ஆக்காமல் தோத்திரமாகவே இணைத்து, அதற்கு வாழ்வியல் வகுத்தமைத்து, பயனும் கூறி அமைத்துள்ளார். மேலேகூறப்பெற்ற முறையில், சிவதத்துவவிவேகத்துள் ஏழாம் பாடலில் நட்பியல் உரை வகுக்கலுற்றேன் என்று சிவஞானசுவாமி கள் எழுதிக்காட்டுவதன் நுட்பத்தைத் தம்முடைய ஆய்வுப் பொருளாக அமைத்துக்கொண்டு, சைவசித்தாந்தச் செந்நெறியில் சிவஞானமுனிவர் வகுத்துணர்ந்து தெளிவித்த சித்தாந்தச் செம் பொருளிது என விளக்கிக் காட்டுவதே இத்தலைப்பின் குறிக் கோள். உடலும் உயிரும் அவன், அவள், அது என உலகப் பொருள்களை எடுத்துக் காட்டி, அவைகளின் மூலம் உலகத்தையும், உலகின் அடிப்படையில் கடவுளையும்; முதல் நூற்பாவின் பொருளாக்கி;
சிவஞான முனிவரின் நட்பியலுரை கருதிப் போலும் . தொகுப்பாயமைந்த போதிலும் ஸ்மிருதிகள் புராணங்கள் சான்றுகளைக் கொண்டதாக விளங்குவது சுருதிச் சான்றுகளைக் கொள்ளாமையால் குறை யுடையதாகவே முடியும் என்று கருதிப் போலும் சுவாமிகள் சுருதிச் சான்றுகளை முன்னர் அமைத்து அதனை நூலாக்கி சிவதோத்திரமாலை என யாத்தேன் என்று கூறி நூற்பயனும் கூறிமுடித்து நிறுத்துகிறார் . ஆகியவைகளின் 314 அப்பைய தீட்சிதரின் அறுபது வடமொழிச் சுலோகங்களுக்கு அறுபது பாட்டுக்களை யாத்தமைத்த சிவஞானமுனிவர் முன்னர் ஏழுபாக்கள் அமைத்தார் . அவைகளில் முதன் மூன்றும் உபநிடத் வாக்கியங்களின் விரிவாகப் பேரின்பகாரணன் முற்றுணர்வினன் தூயதன்மையன் எனநின்ற சிவன் பெருமைகளை விளக்கி நின்றன . அடுத்து நான்கு பாட்டுக்கள் சிவதத்துவ விவேகத்துக்குரிய பாயிரம் என அமைக்கப்பெற்றுள்ளன . இவை ஏழுபாட்டுக்களுக்கு அப்பால் அறுபது பாட்டுக்கள் அப்பைய தீட்சிதரின் சுலோகங்களின் தமிழாக்கம் இறுதிநின்ற மூன்றும் நூலின் பெயர் படித்தல் பயன் ஆகியவைகளை விளக்கி நின்றன . அவ்வகையில் ஒரு முழு நூலாக ஆக்கியதோடன்றி அவற்றைத் தோத்திரமாக்கியும் அமைத்தபெருமை சிவஞான முனிவர்க்குண்டு . சிவபரத்துவத்தை எடுத்து மொழிந்தால் அது ஒருவகைத் தத்துவநூல் . சிவஞான போதம் தத்துவநூல் . அதனைக் கோயிலில் தோத்திரநூலாக அமைத்து ஓதிப் பயன்பெறவேண்டும் என்று கொள்ள முடியாது . அப்பைய தீட்சிதரின் அறுபது சுலோகப் பொருளை வெற்று மொழி பெயர்ப்பாக ஆக்காமல் தோத்திரமாகவே இணைத்து அதற்கு வாழ்வியல் வகுத்தமைத்து பயனும் கூறி அமைத்துள்ளார் . மேலேகூறப்பெற்ற முறையில் சிவதத்துவவிவேகத்துள் ஏழாம் பாடலில் நட்பியல் உரை வகுக்கலுற்றேன் என்று சிவஞானசுவாமி கள் எழுதிக்காட்டுவதன் நுட்பத்தைத் தம்முடைய ஆய்வுப் பொருளாக அமைத்துக்கொண்டு சைவசித்தாந்தச் செந்நெறியில் சிவஞானமுனிவர் வகுத்துணர்ந்து தெளிவித்த சித்தாந்தச் செம் பொருளிது என விளக்கிக் காட்டுவதே இத்தலைப்பின் குறிக் கோள் . உடலும் உயிரும் அவன் அவள் அது என உலகப் பொருள்களை எடுத்துக் காட்டி அவைகளின் மூலம் உலகத்தையும் உலகின் அடிப்படையில் கடவுளையும் ; முதல் நூற்பாவின் பொருளாக்கி ;