சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் அவ்வாறே,ஐந்தெழுத்தால் நின்று, ஐந்தெழுத்தால் இயற்றி, ஐம்பொறிகள் என நின்ற உடலை அறிவு நிலையமாக ஆக்குகின் றான். 'ஓம்' என்ற எழுத்தால் மனம் முதலிய அகக் கருவிகளை இயக்கி, அறிவைப் பெறுவதற்கு உற்ற துணைக் கருவிகளாக அமைத்து, உயிரானது அறிவைப் பெற உதவுகிறான். 34 இவையளைத்தும் திருவருட்பயன், உண்மைவிளக்கம் என்ற இருநூல்களாலும் கிடைத்த செய்திகள். இவைகளின் மூலம் நமக்குக் கிடைக்கும் தொகுப்புச் செய்தி ஒன்று உண்டு. உடலானது ஒருமைத்தாய்-ஒற்றித்து உயிருடன் நிற்கிறது. அதனால் வாழும் நிலை பெறுகிறது. உயிரானது உடலோடு ஒன்றி நிற்கிறது; உணர்வைப் பெறுகிறது. உற்றுநிற்றல், ஒன்றி நிற்றல் என்ற அடிப்படையிலேயே உடலானது வாழும் நிலையையும், உயிரானது உணர்வோடு ஒன்றும் நிலையையும் பெறுகின்றன என்று கொள்ள இடம் தருகின்றது. இக்கருத்தை ஏற்பதற்குத் தடையாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் டேக்கார்ட் கூறிய பொருண்மை வாதம். அப்பரடிகள் தீர் திறன் பொருள் வரையறைகளை நாம் மெய்ப்பொருளியலில் அணுகி, தெரிவுறத் தெரிந்து கொள்ளும் நிலை அமையவில்லையானால் மீளவும் நாம் அருளாளர்களின் திருவாக்குக்களைத் தேடித்தான் சென்று தாள்பணிதல் வேண்டும். "மெய்ப்பொருளைத் திருவருளால் காணும் விதியுடையேன்’’ என்பது காரைக்காலம்மையார் திருவாக்கு. அவ்வகையில் சேக் கிழார் நமக்கு முதற்கை கொடுக்கிறார். தில்லையை நோக்கிய பயணம் மேற்கொண்ட திருநாவுக்கரசரின் மனநிலையை, "ஆனாதசீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற வானாறு புடைபரக்கும் மலர்ச்சடையார் அடிவணங்கி ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து தேனாறு மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கணைந்தார்.' என (பெரிய புராணம் 1426) அமைத்து. காட்டினார் சேக்கிழார். இங்கே நமக்குக் கிடைக்கும் அரிய செய்தி ஒன்று உண்டு.
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் அவ்வாறே ஐந்தெழுத்தால் நின்று ஐந்தெழுத்தால் இயற்றி ஐம்பொறிகள் என நின்ற உடலை அறிவு நிலையமாக ஆக்குகின் றான் . ' ஓம் ' என்ற எழுத்தால் மனம் முதலிய அகக் கருவிகளை இயக்கி அறிவைப் பெறுவதற்கு உற்ற துணைக் கருவிகளாக அமைத்து உயிரானது அறிவைப் பெற உதவுகிறான் . 34 இவையளைத்தும் திருவருட்பயன் உண்மைவிளக்கம் என்ற இருநூல்களாலும் கிடைத்த செய்திகள் . இவைகளின் மூலம் நமக்குக் கிடைக்கும் தொகுப்புச் செய்தி ஒன்று உண்டு . உடலானது ஒருமைத்தாய் - ஒற்றித்து உயிருடன் நிற்கிறது . அதனால் வாழும் நிலை பெறுகிறது . உயிரானது உடலோடு ஒன்றி நிற்கிறது ; உணர்வைப் பெறுகிறது . உற்றுநிற்றல் ஒன்றி நிற்றல் என்ற அடிப்படையிலேயே உடலானது வாழும் நிலையையும் உயிரானது உணர்வோடு ஒன்றும் நிலையையும் பெறுகின்றன என்று கொள்ள இடம் தருகின்றது . இக்கருத்தை ஏற்பதற்குத் தடையாக இருப்பது ஒன்றே ஒன்றுதான் . அதுதான் டேக்கார்ட் கூறிய பொருண்மை வாதம் . அப்பரடிகள் தீர் திறன் பொருள் வரையறைகளை நாம் மெய்ப்பொருளியலில் அணுகி தெரிவுறத் தெரிந்து கொள்ளும் நிலை அமையவில்லையானால் மீளவும் நாம் அருளாளர்களின் திருவாக்குக்களைத் தேடித்தான் சென்று தாள்பணிதல் வேண்டும் . மெய்ப்பொருளைத் திருவருளால் காணும் விதியுடையேன் என்பது காரைக்காலம்மையார் திருவாக்கு . அவ்வகையில் சேக் கிழார் நமக்கு முதற்கை கொடுக்கிறார் . தில்லையை நோக்கிய பயணம் மேற்கொண்ட திருநாவுக்கரசரின் மனநிலையை ஆனாதசீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற வானாறு புடைபரக்கும் மலர்ச்சடையார் அடிவணங்கி ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து தேனாறு மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கணைந்தார் . ' என ( பெரிய புராணம் 1426 ) அமைத்து . காட்டினார் சேக்கிழார் . இங்கே நமக்குக் கிடைக்கும் அரிய செய்தி ஒன்று உண்டு .