சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவரின் நட்பியலுரை தில்லைக் கூத்தப் பெருமானின் திருநடம் கண்டு நேர்நின்று கும்பிடுதல் என்ற ஒரு நிகழ்வில், ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொளல் உண்டு என்ற அளவில் நாம் அதை அமைத்துக் கொள்ளலாம். "நீடும் திருவுடன் நிகழும் பெருகொளி நிறை அம்பலம் நினைவுற நேரே கூடும்படி வரும் அன்பால் இன்புறு குணமும் பெறவரும் நிலை கூடத் தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா ஆடும் கழல்புரி அமுதத் திருநடம் ஆராவகை தொழுது ஆர்கின்றார்'' 35 என்பது திருநாவுக்கரசர் தில்லைக் கூத்தன் திருநடம் கும்பிடும் அந்நிலையில் பெறும் இன்பநிலையை எடுத்து விளக்கும் சேக் கிழார் திருவாக்கு (பெரிய புராணம் 1431). தொழுது ஆர்கின்றார் என்பது திருநாவுக்கரசரின் அனுபவ நிலை. கண்டு தொழுதலும், களித்து உண்ணுதலும் என்ற இரு நிலைகளைக் கொண்ட இருமையைக்கொண்ட ஒருமை அனுபவம். தொழுது அமைதல் துய்த்து அமைதல் என்ற இரண்டும் இணையவே அமைவது ஞான இன்ப நிறைவு. கருத்தையும் காட்சியையும் இணைத்த ஒருவகைக் கூட்டு நிலையால் உடற்பயனை ஒருபக்கமும், அன்பையும் இன்பத்தையும் இணைத்து அன்பால் இன்புறுதல் என்ற ஒருவகைக் கூட்டு நிலையால் உயிர்ப்பயனை இன்னொரு பக்கமும் நிறுத்தி, பின்னர் அவ்விரண்டையும் இணைத்துத் துய்க்கும் நிலையில் திருநாவுக் கரசரை நிறுத்தி, அவர்தம் அனுபவ நிலையின் சூழல் இது எனச் சுட்டிக் காட்டி அமைக்கும் சேக்கிழாரின் செயலானது நாம் அவரைத் தெய்வச் சேக்கிழார் என அழைக்குமாறு நம்மை ஆட் படுத்துகின்றது. உடல்-உயிர்- இருமை இணையும் நிலை உண்டு எனக் கொண் டாலும் எது? எதனால்? என்பன போன்ற வினாக்களுக்கு உரிய விடைகள் நமக்கு இன்னும் நிறைவாக அமையவில்லை. அப்பரடிகள் எடுத்துக் கொண்ட குறிக்கோள் அனுபவம் என்பது ஊனாலும் உயிாலும் உள்ள பயன் கொள்ளல் என்பதே.
சிவஞான முனிவரின் நட்பியலுரை தில்லைக் கூத்தப் பெருமானின் திருநடம் கண்டு நேர்நின்று கும்பிடுதல் என்ற ஒரு நிகழ்வில் ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொளல் உண்டு என்ற அளவில் நாம் அதை அமைத்துக் கொள்ளலாம் . நீடும் திருவுடன் நிகழும் பெருகொளி நிறை அம்பலம் நினைவுற நேரே கூடும்படி வரும் அன்பால் இன்புறு குணமும் பெறவரும் நிலை கூடத் தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா ஆடும் கழல்புரி அமுதத் திருநடம் ஆராவகை தொழுது ஆர்கின்றார் ' ' 35 என்பது திருநாவுக்கரசர் தில்லைக் கூத்தன் திருநடம் கும்பிடும் அந்நிலையில் பெறும் இன்பநிலையை எடுத்து விளக்கும் சேக் கிழார் திருவாக்கு ( பெரிய புராணம் 1431 ) . தொழுது ஆர்கின்றார் என்பது திருநாவுக்கரசரின் அனுபவ நிலை . கண்டு தொழுதலும் களித்து உண்ணுதலும் என்ற இரு நிலைகளைக் கொண்ட இருமையைக்கொண்ட ஒருமை அனுபவம் . தொழுது அமைதல் துய்த்து அமைதல் என்ற இரண்டும் இணையவே அமைவது ஞான இன்ப நிறைவு . கருத்தையும் காட்சியையும் இணைத்த ஒருவகைக் கூட்டு நிலையால் உடற்பயனை ஒருபக்கமும் அன்பையும் இன்பத்தையும் இணைத்து அன்பால் இன்புறுதல் என்ற ஒருவகைக் கூட்டு நிலையால் உயிர்ப்பயனை இன்னொரு பக்கமும் நிறுத்தி பின்னர் அவ்விரண்டையும் இணைத்துத் துய்க்கும் நிலையில் திருநாவுக் கரசரை நிறுத்தி அவர்தம் அனுபவ நிலையின் சூழல் இது எனச் சுட்டிக் காட்டி அமைக்கும் சேக்கிழாரின் செயலானது நாம் அவரைத் தெய்வச் சேக்கிழார் என அழைக்குமாறு நம்மை ஆட் படுத்துகின்றது . உடல் - உயிர்- இருமை இணையும் நிலை உண்டு எனக் கொண் டாலும் எது ? எதனால் ? என்பன போன்ற வினாக்களுக்கு உரிய விடைகள் நமக்கு இன்னும் நிறைவாக அமையவில்லை . அப்பரடிகள் எடுத்துக் கொண்ட குறிக்கோள் அனுபவம் என்பது ஊனாலும் உயிாலும் உள்ள பயன் கொள்ளல் என்பதே .