சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் உடம்பால் அம்பலத்தை, கூத்தினைக் கண்டு மகிழ்ந்து இன் புற்றுத் தொழுதல். இது உடலாற் பெறும் பயன் திருக்கூத்து நாதனுடன் இணைந்து நின்று, அறிவால் அறிந்து, இன்புறுதல் என்பது உயிரால் பெறும் பயன். இவ்வாறு அமைத்து அவர்தம் குறிக்கோளை விளக்கலாம். 36 சேக்கிழார் தரும் விளக்கங்கள் ஒருவகையில் அமைதி அளித் தாலும், நாம் அப்பரடிகள் பதிகங்களையே மூலமாகக் கொண்டு ஆய்ந்தால் பயன் விளையும். பொதுவாக, வாகீசப் பெருந்தகை 'உயிர்' என்பதற்கே தம் முடைய அனுபவ அடிப்படையில் ஒரு விளக்கம் அமைத்தருளுவார். அதையும் நாம் முதலில் தெரிந்து கொள்வது நம்பிக்கை உலகத் தார்க்குப் போதுமான ஒன்று. ''ஊன் நிலாவி உயிர்க்கும் பொழுதெலாம் நான் நிலாவி இருப்பன் என் நாதனைத் தேன் நிலாவிய சிற்றம் பலவனார் வான் நிலாவி இருக்கவும் வைப்பரே' என்பது ‘அன்னம்பாலிக்கும்' எனத் தொடங்கும் திருக்குறுந் தொகைப் பதிகத்தின் ஐந்தாம் திருப்பாடல். எளிமையுடையது போலத் தோற்றினும் அருமையினும் அருமையதாம் பொருண்மை வாக்கு இது. உடம்பு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையோ செயற் படவில்லை என்பதையோ வரையறை செய்வது அதனிடம் உள்ள காற்றியக்கச் செயல். உயிர்த்தல்-மூச்சுக்காற்று உள் செல்வதும் வெளிவருவதுமாக இருத்தல். உயிர்த்தல் என்ற செயலை உடம் பில் செயற்படுத்துவது எதுவோ அதற்கு ‘உயிர்' என்று பெயர். உயிர்த்தல் என்ற செயலைச் செய்யும் காற்றுக்கு ‘உயிர்’ என்பது செயலின் அடியாகப் பிறந்த இயற்பெயர். காற்றின் இயற் பெயராகிய 'உயிர்' என்பது ஆன்மாவைக் குறிக்க முற்பட்டபோது 'உயிர்' என்பது ஆன்மாவுக்கு ஆகுபெயராக அமைகிறது. "உயிர் எனும் பெயர் இயங்கு காற்கு இயற்பெயர் உரைப்பின் அயலுறுந் தனக்கு அப்பெயர் ஆகுபெயராம்" என்று, கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள், பிரபுலிங்க லீலை, கோரக்கர் கதி, செய்யுள் 38ல் அமைத்துக் காட்டியுள்ளார்.
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் உடம்பால் அம்பலத்தை கூத்தினைக் கண்டு மகிழ்ந்து இன் புற்றுத் தொழுதல் . இது உடலாற் பெறும் பயன் திருக்கூத்து நாதனுடன் இணைந்து நின்று அறிவால் அறிந்து இன்புறுதல் என்பது உயிரால் பெறும் பயன் . இவ்வாறு அமைத்து அவர்தம் குறிக்கோளை விளக்கலாம் . 36 சேக்கிழார் தரும் விளக்கங்கள் ஒருவகையில் அமைதி அளித் தாலும் நாம் அப்பரடிகள் பதிகங்களையே மூலமாகக் கொண்டு ஆய்ந்தால் பயன் விளையும் . பொதுவாக வாகீசப் பெருந்தகை ' உயிர் ' என்பதற்கே தம் முடைய அனுபவ அடிப்படையில் ஒரு விளக்கம் அமைத்தருளுவார் . அதையும் நாம் முதலில் தெரிந்து கொள்வது நம்பிக்கை உலகத் தார்க்குப் போதுமான ஒன்று . ' ' ஊன் நிலாவி உயிர்க்கும் பொழுதெலாம் நான் நிலாவி இருப்பன் என் நாதனைத் தேன் நிலாவிய சிற்றம் பலவனார் வான் நிலாவி இருக்கவும் வைப்பரே ' என்பது அன்னம்பாலிக்கும் ' எனத் தொடங்கும் திருக்குறுந் தொகைப் பதிகத்தின் ஐந்தாம் திருப்பாடல் . எளிமையுடையது போலத் தோற்றினும் அருமையினும் அருமையதாம் பொருண்மை வாக்கு இது . உடம்பு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையோ செயற் படவில்லை என்பதையோ வரையறை செய்வது அதனிடம் உள்ள காற்றியக்கச் செயல் . உயிர்த்தல் - மூச்சுக்காற்று உள் செல்வதும் வெளிவருவதுமாக இருத்தல் . உயிர்த்தல் என்ற செயலை உடம் பில் செயற்படுத்துவது எதுவோ அதற்கு உயிர் ' என்று பெயர் . உயிர்த்தல் என்ற செயலைச் செய்யும் காற்றுக்கு உயிர் என்பது செயலின் அடியாகப் பிறந்த இயற்பெயர் . காற்றின் இயற் பெயராகிய ' உயிர் ' என்பது ஆன்மாவைக் குறிக்க முற்பட்டபோது ' உயிர் ' என்பது ஆன்மாவுக்கு ஆகுபெயராக அமைகிறது . உயிர் எனும் பெயர் இயங்கு காற்கு இயற்பெயர் உரைப்பின் அயலுறுந் தனக்கு அப்பெயர் ஆகுபெயராம் என்று கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள் பிரபுலிங்க லீலை கோரக்கர் கதி செய்யுள் 38 ல் அமைத்துக் காட்டியுள்ளார் .