சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவரின் நட்பியலுரை உடலையும் இணைத்து நிற்பதாதலின், அது உயிரில் அருளை வெளிப்பட்டு நிற்கச் செய்யும். அவ்வாறே உடம்பில் கண்ணீரைப் பெருக்கெடுக்க வைக்கும். உயிரானது அருளில் நிற்பதை உணரும். உடம்பில் கண்ணீர் பெருகுவதால், உடம்பில் உள்ள தத்துவ அசுத்தக் கூறுகள் நீங்கி, அது பொன் மயமாகிய சுத்த தேகம் என மாற்றம் பெறும். கண்ணீர்ப் பெருக்கமும் உயிர் மாற்றமும் அமையும். 39 காட்சியானது அன்பைத் தொட்டு, அன்பின் வெளிப் பாடானது நீடித்து, நீடித்து,ஆன்ம உருக்கம் வரை சென்று விட வேண்டும். ஆன்ம உருக்கம் உண்டாகும் வரை தான் காட்சி நீடிக்க வேண்டும். உடல், கண் முதலிய கருவிகளின் துணையெல்லாம், ஆன்ம உருக்கம் தோன்றும் வரை. அது அன்பை ஆலிக்குமாறு செய்துவிடும். அன்பு ஆலிக்கும் நிலை அமைந்து விட்டால் மற்றை யவை தாமே அமைந்து விடும். உயிரானது அருளில் இருப்பதை உணரும்; அருள் மயமாக ஆகும்; உடம்பில் கண்ணீர் பெருகிப் பெருகி, உடம்பு பொன்மயமாக மாறி விடும். உயிரும் உடம்பும் ஒரே சமயத்தில் உருகும். அதனால், உயிரில் நின்ற அருள் ஆனந்தமாய்க் கசிந்து வெளிப்படும். அதே சமயத்தில் உடம்பில் எலும்புகள் நைந்து உருகும். புலன்கள் ஒன்றும். வாய் நாதா என அரற்றி உரை தடுமாறும். உரோமம் சிலிர்க்கும். கரம் குவியும். இதயம் மலரும். கண் களி கூரும் அப்போது சுவைதரு கொம்புத் தேன் கொண்டு இந்த உடம்பை, இன்ப ஊற்றை அமைக்கும் யாக்கையாக மாற்றி அமைப்பான். அதனால் அற்புதமான இன்ப ஊற்றானது எலும்புத் தொறும் சென்று உடல் முழுதும் பரவும். இன்பமே அன்பே நிறை யும் ஆக்கையாக இந்த உடல் அமையும். அப்போது என் வாழ்வு எத்தன்மைத்து? துளை யான் இருப்பவன் ஆனேன் "அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்' என்பது. எனக் குறிப்பிடும் நிலை அமையும். அன்பின் பெருக்கத்தால், உயிரில் சிறிய அளவில் அருள் என நின்ற பரம் பொருள் விரிவு பெற்று உயிர் முழுவதையும் தன்னுடையதாக்கிக் கொள்கிறது. அந் நிலையில் உயிர் அருளாகவே விளங்குகின்றது.
சிவஞான முனிவரின் நட்பியலுரை உடலையும் இணைத்து நிற்பதாதலின் அது உயிரில் அருளை வெளிப்பட்டு நிற்கச் செய்யும் . அவ்வாறே உடம்பில் கண்ணீரைப் பெருக்கெடுக்க வைக்கும் . உயிரானது அருளில் நிற்பதை உணரும் . உடம்பில் கண்ணீர் பெருகுவதால் உடம்பில் உள்ள தத்துவ அசுத்தக் கூறுகள் நீங்கி அது பொன் மயமாகிய சுத்த தேகம் என மாற்றம் பெறும் . கண்ணீர்ப் பெருக்கமும் உயிர் மாற்றமும் அமையும் . 39 காட்சியானது அன்பைத் தொட்டு அன்பின் வெளிப் பாடானது நீடித்து நீடித்து ஆன்ம உருக்கம் வரை சென்று விட வேண்டும் . ஆன்ம உருக்கம் உண்டாகும் வரை தான் காட்சி நீடிக்க வேண்டும் . உடல் கண் முதலிய கருவிகளின் துணையெல்லாம் ஆன்ம உருக்கம் தோன்றும் வரை . அது அன்பை ஆலிக்குமாறு செய்துவிடும் . அன்பு ஆலிக்கும் நிலை அமைந்து விட்டால் மற்றை யவை தாமே அமைந்து விடும் . உயிரானது அருளில் இருப்பதை உணரும் ; அருள் மயமாக ஆகும் ; உடம்பில் கண்ணீர் பெருகிப் பெருகி உடம்பு பொன்மயமாக மாறி விடும் . உயிரும் உடம்பும் ஒரே சமயத்தில் உருகும் . அதனால் உயிரில் நின்ற அருள் ஆனந்தமாய்க் கசிந்து வெளிப்படும் . அதே சமயத்தில் உடம்பில் எலும்புகள் நைந்து உருகும் . புலன்கள் ஒன்றும் . வாய் நாதா என அரற்றி உரை தடுமாறும் . உரோமம் சிலிர்க்கும் . கரம் குவியும் . இதயம் மலரும் . கண் களி கூரும் அப்போது சுவைதரு கொம்புத் தேன் கொண்டு இந்த உடம்பை இன்ப ஊற்றை அமைக்கும் யாக்கையாக மாற்றி அமைப்பான் . அதனால் அற்புதமான இன்ப ஊற்றானது எலும்புத் தொறும் சென்று உடல் முழுதும் பரவும் . இன்பமே அன்பே நிறை யும் ஆக்கையாக இந்த உடல் அமையும் . அப்போது என் வாழ்வு எத்தன்மைத்து ? துளை யான் இருப்பவன் ஆனேன் அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக என்பரம் அல்லா இன்னருள் தந்தாய் ' என்பது . எனக் குறிப்பிடும் நிலை அமையும் . அன்பின் பெருக்கத்தால் உயிரில் சிறிய அளவில் அருள் என நின்ற பரம் பொருள் விரிவு பெற்று உயிர் முழுவதையும் தன்னுடையதாக்கிக் கொள்கிறது . அந் நிலையில் உயிர் அருளாகவே விளங்குகின்றது .