சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் திருவருளாக இறைவனாக விளங்கும் ஆன்மாவானது சிற்றம் பலத்தே நிருத்தமிடும் இறைவனுடன் ஒத்த நிலை பெற்று, நேர் நின்று, 'நேர்க்கண்டு, நேர்ப்படும் நிலையில் திருவருள் அனுபவம் அமைகிறது. இதுவரை அன்பு; அன்பு ஆலித்தல்; அருளாதல் என்ற முறை அமையும். இனி, மீளவும் காட்சி அமைய வேண்டும் என்பதாக அடிக்கடி ஆர்வம் அமையும். அப்பொழுது முன்னுள்ள முறையிலேயே தொடர்ந்து சென்று, வான்நிலாவ வைக்கும் முறை அமையும். 40 திருவருள் அனுபவம் அமையும் வரை முன்னுள்ள முறை அந் நிலையிலிருந்து நாதனின் திருவடியைப் பற்றிச் செல்லும் முறையை ஆர்வம் உண்டாக்கும். அதனால், அவன் அருள் அனுபவத்தோடு வான் நிலாவவும் வைப்பன். வான் நிலாவ வைத்தல் என்பது ஆன்மாவானது இறைவனுடைய தாளில் அடங்கி அது செல்லும் அளவுக்கு வியாபகப்பட்டு நிற்கும் நிலை. இங்கே, இறைவன் திருவடி வியாபகத்தையும், அதனோடு இணைந்து நின்றமையாலே தாம் வியாப்பியமாக இணைந்து நின்ற நிலையும், அருளின் வியாபகமாக இறைவன் நிற்கும் நிலையும், அன்பின் பெருக்கத்தால் உயிர் அதனுடைய வியாப்பியமாக இணைந்து நிற்கும் நிலையும் அனுபவம் பெறும். இத்தகைய அனுபவமே நட்பு நிலை அனுபவம். அன்பும் அருளும் நட்பும் வேற்றுமைகள் பெருகி நிற்கும் எல்லாவற்றினும் இயைந்து நின்றும், அவைகளையெல்லாம் தத்தம் அளவில் நிற்குமாறு செய் வித்தும், அவற்றுள் இயைந்தும் தாக்குறாது நின்று, அவ்வவற்றைச் செயற்படுத்தியும், உடங்கியைந்து தம்முட்புணர்த்தியும், அவ்வந் நிலைகளில் அவ்வவற்றின் அனுபவங்களைக் கொடுத்தும், அவை களையெல்லாம் வெறாது தன்னகப்படுத்தி மேற்பட்டு நிற்கும் வியாபகப் பொருண்மையின் உண்மை நிலை அனுபவம் பெறும். அதனையே அத்துவித நிலை அனுபவம் என்றும் நட்பியல் நிலை என்றும் கொள்ளல் வேண்டும். இந்நிலை அனுபவம் அமையும் போது, இது வரையில் தன்னுடன் மறைந்து மறைந்து நின்ற
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் திருவருளாக இறைவனாக விளங்கும் ஆன்மாவானது சிற்றம் பலத்தே நிருத்தமிடும் இறைவனுடன் ஒத்த நிலை பெற்று நேர் நின்று ' நேர்க்கண்டு நேர்ப்படும் நிலையில் திருவருள் அனுபவம் அமைகிறது . இதுவரை அன்பு ; அன்பு ஆலித்தல் ; அருளாதல் என்ற முறை அமையும் . இனி மீளவும் காட்சி அமைய வேண்டும் என்பதாக அடிக்கடி ஆர்வம் அமையும் . அப்பொழுது முன்னுள்ள முறையிலேயே தொடர்ந்து சென்று வான்நிலாவ வைக்கும் முறை அமையும் . 40 திருவருள் அனுபவம் அமையும் வரை முன்னுள்ள முறை அந் நிலையிலிருந்து நாதனின் திருவடியைப் பற்றிச் செல்லும் முறையை ஆர்வம் உண்டாக்கும் . அதனால் அவன் அருள் அனுபவத்தோடு வான் நிலாவவும் வைப்பன் . வான் நிலாவ வைத்தல் என்பது ஆன்மாவானது இறைவனுடைய தாளில் அடங்கி அது செல்லும் அளவுக்கு வியாபகப்பட்டு நிற்கும் நிலை . இங்கே இறைவன் திருவடி வியாபகத்தையும் அதனோடு இணைந்து நின்றமையாலே தாம் வியாப்பியமாக இணைந்து நின்ற நிலையும் அருளின் வியாபகமாக இறைவன் நிற்கும் நிலையும் அன்பின் பெருக்கத்தால் உயிர் அதனுடைய வியாப்பியமாக இணைந்து நிற்கும் நிலையும் அனுபவம் பெறும் . இத்தகைய அனுபவமே நட்பு நிலை அனுபவம் . அன்பும் அருளும் நட்பும் வேற்றுமைகள் பெருகி நிற்கும் எல்லாவற்றினும் இயைந்து நின்றும் அவைகளையெல்லாம் தத்தம் அளவில் நிற்குமாறு செய் வித்தும் அவற்றுள் இயைந்தும் தாக்குறாது நின்று அவ்வவற்றைச் செயற்படுத்தியும் உடங்கியைந்து தம்முட்புணர்த்தியும் அவ்வந் நிலைகளில் அவ்வவற்றின் அனுபவங்களைக் கொடுத்தும் அவை களையெல்லாம் வெறாது தன்னகப்படுத்தி மேற்பட்டு நிற்கும் வியாபகப் பொருண்மையின் உண்மை நிலை அனுபவம் பெறும் . அதனையே அத்துவித நிலை அனுபவம் என்றும் நட்பியல் நிலை என்றும் கொள்ளல் வேண்டும் . இந்நிலை அனுபவம் அமையும் போது இது வரையில் தன்னுடன் மறைந்து மறைந்து நின்ற