சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவரின் நட்பியலுரை கயமை முற்றாக நீங்கும். சால்பினை ஆளும் தன்மை எனப்பெறும் நட்பியல் நிலை அமையும் என்பது அருளனுபவத்தின் மேற்பட்ட இறையியலனுபவம். இதனை, "அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு" என்றும், “அன்பீனும் ஆர்வ முடைமை; அது ஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு" 41 என்றும், இருவகைத் தோற்ற விளைவுகளைத் தோற்றுவிக்கும் அன்பின் இலக்கணமும் விளக்கமும் என அமைத்துக் காணும் முறை யில் விளக்கமுறுத்திக் கொள்ள வேண்டும். நட்பியலுரை-விளக்கம் மாபாடியத்துள், வன்மை மென்மை முறைபற்றி உரை வகுத்துக் காண வேண்டும் என வகைமைப்படுத்தி, அவ்வாறே திருமுறைகளையும் இதனோடு இது இவ்வாற்றாற் பொருள் காண வேண்டும் என வரையறை செய்தமைத்தலுக்கு உரிய அடிப்படை முறை நட்பியலனுபவத்தால் போந்த நயம் என உளங்கொள்ளு மாறு அமைத்துக் காட்டிய சிவஞான சுவாமிகளின் தெளிபொருள் நுட்பம் உணர்ந்து உணர்ந்து மகிழ்தற்குரியதாம். இனி, நட்பியலுரை என்ற அனுபவநிலையை விளக்கு முகத் தாலேயே சிவஞான போத மாபாடியவுரை விளங்குகின்றது. என்பது உண்மையே. ஆயினும் அதனைத் தெள்ளத் தெளிய விளக்கும் வகையில் அமைந்த இடம் ஒன்றைச் சுட்டி விளக்கினால் இத்தலைப்புக்குரிய பொருண்மை நிறைவுற்று விளங்குவதாகும். இடையில் குறிக்கொண்டு காக்க வேண்டுவதாம் சிறப்பு ஒன்றையும் கருதி முடித்தல் கடன் ஆகும். நட்பியலனுபவ. விளக்கமே சோமேசர் முதுமொழி வெண்பா சிவதத்துவ விவேகம் என்ற நூலின் அடிப்படையில் வடமொழியில் வரும் சிவபரத்துவ வசனங்களுக்கெல்லாம் உரை விளக்கம் கண்டமை போலவே - நட்பியலுரை கண்டமை போலவே, திருக்குறளுக்கும் நட்பியலுரை வரைந்த நிலைமையில் தோற்றம் பெற்ற முழு நூலே சோமேசர் முதுமொழி வெண்பா என்பதை உணர்ந்து தெளிதல் வேண்டும்.
சிவஞான முனிவரின் நட்பியலுரை கயமை முற்றாக நீங்கும் . சால்பினை ஆளும் தன்மை எனப்பெறும் நட்பியல் நிலை அமையும் என்பது அருளனுபவத்தின் மேற்பட்ட இறையியலனுபவம் . இதனை அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு என்றும் அன்பீனும் ஆர்வ முடைமை ; அது ஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு 41 என்றும் இருவகைத் தோற்ற விளைவுகளைத் தோற்றுவிக்கும் அன்பின் இலக்கணமும் விளக்கமும் என அமைத்துக் காணும் முறை யில் விளக்கமுறுத்திக் கொள்ள வேண்டும் . நட்பியலுரை - விளக்கம் மாபாடியத்துள் வன்மை மென்மை முறைபற்றி உரை வகுத்துக் காண வேண்டும் என வகைமைப்படுத்தி அவ்வாறே திருமுறைகளையும் இதனோடு இது இவ்வாற்றாற் பொருள் காண வேண்டும் என வரையறை செய்தமைத்தலுக்கு உரிய அடிப்படை முறை நட்பியலனுபவத்தால் போந்த நயம் என உளங்கொள்ளு மாறு அமைத்துக் காட்டிய சிவஞான சுவாமிகளின் தெளிபொருள் நுட்பம் உணர்ந்து உணர்ந்து மகிழ்தற்குரியதாம் . இனி நட்பியலுரை என்ற அனுபவநிலையை விளக்கு முகத் தாலேயே சிவஞான போத மாபாடியவுரை விளங்குகின்றது . என்பது உண்மையே . ஆயினும் அதனைத் தெள்ளத் தெளிய விளக்கும் வகையில் அமைந்த இடம் ஒன்றைச் சுட்டி விளக்கினால் இத்தலைப்புக்குரிய பொருண்மை நிறைவுற்று விளங்குவதாகும் . இடையில் குறிக்கொண்டு காக்க வேண்டுவதாம் சிறப்பு ஒன்றையும் கருதி முடித்தல் கடன் ஆகும் . நட்பியலனுபவ . விளக்கமே சோமேசர் முதுமொழி வெண்பா சிவதத்துவ விவேகம் என்ற நூலின் அடிப்படையில் வடமொழியில் வரும் சிவபரத்துவ வசனங்களுக்கெல்லாம் உரை விளக்கம் கண்டமை போலவே - நட்பியலுரை கண்டமை போலவே திருக்குறளுக்கும் நட்பியலுரை வரைந்த நிலைமையில் தோற்றம் பெற்ற முழு நூலே சோமேசர் முதுமொழி வெண்பா என்பதை உணர்ந்து தெளிதல் வேண்டும் .