சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவரின் நட்பியலுரை இதனடிப்படையில் முதற்குறளுக்கு விளக்கம் கூறி, அதன் மூலமாக, சிவஞான போதத்தின் முதல் நூற்பாவின் மூன்றாம் அதிகரணத்து உரையையும் அமைத்துக் காட்டும் சிவஞான சுவாமி களின் நட்பியலுரை அனுபவம் அறிந்து மகிழ்வதற்குரியது. 43 சிவஞானபோத முதல் நூற்பாக் கருத்து நம் கண்ணுக்குப் புலனாகும் இவ்வுலகம் பொருள்களின் அடிப் படையில் ஆய்வதற்குரியது. உயிர்ப்பொருள் உயிரில் பொருள், பருப்பொருள் நுண்பொருள், அசையும் பொருள் அசையாப் பொருள் இவ்வாறு பலவாகப் பகுத்து நோக்கப் பெறும். நம்முடைய ஆய்வுக்கு ஏற்ப, இவ்வுலகம் முற்றும் அவன், அவள், அது என்று குறிக்கப்பெறும் பொருள்களின் தொகுதியே என்பது தெளிவாம். ஆணும் பெண்ணுமாய்ப் பலர் கூடியிருக்கும் இடம் அவை எனப்பெறுதல் உலக வழக்கு. மெய்கண்டாரும், இவ்வுலகை, 'அவன் அவள் அது என்னும் மூவகைப் பொருளும் கூடி இயன்றுள்ள அவை” என்று அறிமுகப்படுத்துகின்றார். மக்கள் வந்து கூடுங்கால் அவை உண்டு. அவர்கள் பிரிந்து போனால் ‘அவை’ என்பது இல்லை. ஒருவர் முன்னின்று மக்கள வையைக் கூட்டுகின்றார். அவை சிலநேரம் இருக்கிறது. பிறகு பிரிந்து விடுகிறது. மீளவும் கூட்டப் பெறலாம். இதனையே மெய்கண்டார், "அவனும் அவளும் அதுவும் ஆகிய பொருள்கள் கூடியிருக்கும் அவையானது தோன்றுதல் இருத்தல் இல்லாது போதல் என்ற மூவகை நிலைகளைக் கொண்டிருக்கிறது. ஒருவர் கூட்டக் கூடும் அவைபோல, இவ்வுலகமும் ஒருவரால் உண்டாக்கப் பெற, அழிக்கப் பெற, அழிக்கும்வரை நிலைத்தல் பெற இவ்வாறு முத்தொழிற் பட்டு இயங்குவது என்று குறிப்பிட்டார். அவையிலுள்ளோர் பிரிந்தபோது அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிடுவர். மீண்டும் அழைத்தால் எந்த வீடுகளில் சென்று தங்கினார்களோ அங்கிருந்தே மீள வருவர். முன்னே கூடிய அவை, பிரிந்து மீளவும் கூடுகிறதென்றால் முன்பேயே முடிவுபெறாத பணி காரணமாக மீண்டும் அவை கூடுகிறதென அறியலாம். மேலே காட்டப்பெற்றவைகளைத் தொகுத்து அமைத்துக் கொள்ளல் வேண்டும்.
சிவஞான முனிவரின் நட்பியலுரை இதனடிப்படையில் முதற்குறளுக்கு விளக்கம் கூறி அதன் மூலமாக சிவஞான போதத்தின் முதல் நூற்பாவின் மூன்றாம் அதிகரணத்து உரையையும் அமைத்துக் காட்டும் சிவஞான சுவாமி களின் நட்பியலுரை அனுபவம் அறிந்து மகிழ்வதற்குரியது . 43 சிவஞானபோத முதல் நூற்பாக் கருத்து நம் கண்ணுக்குப் புலனாகும் இவ்வுலகம் பொருள்களின் அடிப் படையில் ஆய்வதற்குரியது . உயிர்ப்பொருள் உயிரில் பொருள் பருப்பொருள் நுண்பொருள் அசையும் பொருள் அசையாப் பொருள் இவ்வாறு பலவாகப் பகுத்து நோக்கப் பெறும் . நம்முடைய ஆய்வுக்கு ஏற்ப இவ்வுலகம் முற்றும் அவன் அவள் அது என்று குறிக்கப்பெறும் பொருள்களின் தொகுதியே என்பது தெளிவாம் . ஆணும் பெண்ணுமாய்ப் பலர் கூடியிருக்கும் இடம் அவை எனப்பெறுதல் உலக வழக்கு . மெய்கண்டாரும் இவ்வுலகை ' அவன் அவள் அது என்னும் மூவகைப் பொருளும் கூடி இயன்றுள்ள அவை என்று அறிமுகப்படுத்துகின்றார் . மக்கள் வந்து கூடுங்கால் அவை உண்டு . அவர்கள் பிரிந்து போனால் அவை என்பது இல்லை . ஒருவர் முன்னின்று மக்கள வையைக் கூட்டுகின்றார் . அவை சிலநேரம் இருக்கிறது . பிறகு பிரிந்து விடுகிறது . மீளவும் கூட்டப் பெறலாம் . இதனையே மெய்கண்டார் அவனும் அவளும் அதுவும் ஆகிய பொருள்கள் கூடியிருக்கும் அவையானது தோன்றுதல் இருத்தல் இல்லாது போதல் என்ற மூவகை நிலைகளைக் கொண்டிருக்கிறது . ஒருவர் கூட்டக் கூடும் அவைபோல இவ்வுலகமும் ஒருவரால் உண்டாக்கப் பெற அழிக்கப் பெற அழிக்கும்வரை நிலைத்தல் பெற இவ்வாறு முத்தொழிற் பட்டு இயங்குவது என்று குறிப்பிட்டார் . அவையிலுள்ளோர் பிரிந்தபோது அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிடுவர் . மீண்டும் அழைத்தால் எந்த வீடுகளில் சென்று தங்கினார்களோ அங்கிருந்தே மீள வருவர் . முன்னே கூடிய அவை பிரிந்து மீளவும் கூடுகிறதென்றால் முன்பேயே முடிவுபெறாத பணி காரணமாக மீண்டும் அவை கூடுகிறதென அறியலாம் . மேலே காட்டப்பெற்றவைகளைத் தொகுத்து அமைத்துக் கொள்ளல் வேண்டும் .