சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவரின் நட்பியலுரை கொண்டு அழித்தலே முதல் என்பதாக அமைத்துக் காட்டுகின்றார். அழித்தலே முதல் என்ற கருத்தை, சிவன், சங்காரகாரணன் என்ற அடிப்படையில் சிவபரத்வம் கூறும் வகையில் மட்டும் சிவஞான முனிவரின் விளக்கம் அமைந்து விடவில்லை. தமிழக மரபுக் கொத்த நீண்ட நெடும் பழமை யுரிமையுடைய. சிந்தனையின் விளைவாக அமைத்தே தத்துவ உலகிற்கு வழங்குகின்றார் சிவஞானமுனிவர். தொல்காப்பியவழியில் தொல்காப்பியத்தில் முதற்பொருள் என நின்றவை இடமும் காலமும் மட்டுமே. இடமும் காலமும் இணைந்து நிற்கின்றன. இவை இரண்டுடன் வினைமுதலாம் பொருளொன்றும் இருக் கின்றது. மூன்றும் தத்தம் அளவில் நிறை உள்பொருளாக அமை கின்றன. உலகத்தோற்றம் அமைவதற்கு இடம் கொடுப்பனவாய் அமையும் நிலையில் அவைகள் உள்ளன எனக் கொள்ளலாமே யன்றித் தோற்றம் கொண்டன என்று சொல்ல இயலாத நிலை. தோற்றுவிப்பவன் எனக் கொள்ளத்தகும் முதல்வனும் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என நிற்கவில்லை. நிறைந்து நிற்கும் நிலையை, எந்த ஒரு தோற்றமும் கொள் வதற்கு முன் உள்ள நிலையை இறைமை என இறைவனுக்கும் உலகம் எனப் பிரபஞ்சத்துக்கும் அமைத்துக் கண்டும், இணைத்துச் சிந்தித்தும் அமைந்த நிலை சங்ககாலத் தமிழ் மரபு நிலை. உலகத்தோற்றம் பற்றிப் பேச முற்படும் போது, முதலில், 'இறை' என்ற பொதுநிலையை 'இறு' என்ற பகுதியின் அடிப் படையில் 'அழிப்பது' என்பதாக அமைத்துக் கொள்ளுகின்றது. இறை என்பதையே பகுதியாகக் கொண்டு நின்ற நிறை நிலை யானது, 'இறு' என்ற பகுதியாக நிறுத்தி அந்த நிலையை அழித்த போதே மாயோன் என, சேயோன் என, வேந்தன் என, வருணன் என அமையும் நிலை உருப்பெறுகிறது. மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும்
சிவஞான முனிவரின் நட்பியலுரை கொண்டு அழித்தலே முதல் என்பதாக அமைத்துக் காட்டுகின்றார் . அழித்தலே முதல் என்ற கருத்தை சிவன் சங்காரகாரணன் என்ற அடிப்படையில் சிவபரத்வம் கூறும் வகையில் மட்டும் சிவஞான முனிவரின் விளக்கம் அமைந்து விடவில்லை . தமிழக மரபுக் கொத்த நீண்ட நெடும் பழமை யுரிமையுடைய . சிந்தனையின் விளைவாக அமைத்தே தத்துவ உலகிற்கு வழங்குகின்றார் சிவஞானமுனிவர் . தொல்காப்பியவழியில் தொல்காப்பியத்தில் முதற்பொருள் என நின்றவை இடமும் காலமும் மட்டுமே . இடமும் காலமும் இணைந்து நிற்கின்றன . இவை இரண்டுடன் வினைமுதலாம் பொருளொன்றும் இருக் கின்றது . மூன்றும் தத்தம் அளவில் நிறை உள்பொருளாக அமை கின்றன . உலகத்தோற்றம் அமைவதற்கு இடம் கொடுப்பனவாய் அமையும் நிலையில் அவைகள் உள்ளன எனக் கொள்ளலாமே யன்றித் தோற்றம் கொண்டன என்று சொல்ல இயலாத நிலை . தோற்றுவிப்பவன் எனக் கொள்ளத்தகும் முதல்வனும் மாயோன் சேயோன் வேந்தன் வருணன் என நிற்கவில்லை . நிறைந்து நிற்கும் நிலையை எந்த ஒரு தோற்றமும் கொள் வதற்கு முன் உள்ள நிலையை இறைமை என இறைவனுக்கும் உலகம் எனப் பிரபஞ்சத்துக்கும் அமைத்துக் கண்டும் இணைத்துச் சிந்தித்தும் அமைந்த நிலை சங்ககாலத் தமிழ் மரபு நிலை . உலகத்தோற்றம் பற்றிப் பேச முற்படும் போது முதலில் ' இறை ' என்ற பொதுநிலையை ' இறு ' என்ற பகுதியின் அடிப் படையில் ' அழிப்பது ' என்பதாக அமைத்துக் கொள்ளுகின்றது . இறை என்பதையே பகுதியாகக் கொண்டு நின்ற நிறை நிலை யானது ' இறு ' என்ற பகுதியாக நிறுத்தி அந்த நிலையை அழித்த போதே மாயோன் என சேயோன் என வேந்தன் என வருணன் என அமையும் நிலை உருப்பெறுகிறது . மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும்