சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவரின் நட்பியலுரை சிவஞான முனிவர் அபூர்வவிதி, நியமவிதி, பரிசங்கியாவிதி என்ற மூன்றையும் விரிவாகச் சொல்லி அமைத்தும், திருவருட்பயன் முதல் அதிகாரம் பதிமுதுநிலை என அமைக்கப்பெற்றும் அதன் நுட்பம் அமையாது போனமை போன்றே சிவஞான முனிவர் ''அந்தமே ஆதி" என ஏகாரம் அமைத்து எழுதிய நட்பியலுரை யும் அறிஞர் பெருமக்களால் சிறப்புற எடுத்துப் பேசப்பெறாது அமைந்து போயினமை வருந்துதற் குரியதே. சிவஞான முனிவரின் இக்கருத்து, சோமேசர் முதுமொழி வெண்பாவின் முதற்குறள் விளக்க அடிப்படையை ஒரு முறை உணர்ந்து படித்தார்களானால், அவர் அங்கே அத்தகைய வெண் பாவை அமைத்ததன் நோக்கம் மாபாடியத்தில் இன்ன இடத்தில், இன்ன பொருளை, இதனை அமைப்பதற்காகவே என்பதை உணர வாய்ப்பு அமைந்துவிடும். "சீர்கொள் இறை ஒன்றுண்டு அத்தெய்வம் நீ என்று ஓப்பாற் சோர்வில் அடையால் தெளிந்தோம் சோமேசா -ஓரில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு'' என்பதே சோமேசர் முதுமொழி வெண்பாவின் முதற்பாட்டு. இதனுள் முதலிரண்டு வரிகளின் பொருளை அமைத்துக் காணுதல் வேண்டும். இங்கே, திருக்குறளை, அகரமுதல எழுத்தெல்லாம் என ஒரு பகுதியாக, ஆதிபகவன் முதற்றே உலகு என ஒரு பகுதியாகத் தனித்தனியே நிறுத்திக் கொள்ளவேண்டும். அப்படிநிறுத்திக் கொண்டதும், அவைகள் நின்றநிலை. சோர்வில் அடைமொழி பெற்றநிலை என்ற இரண்டு காரணங் களால் இரண்டு முடிவுகளை நாங்கள் தெரிந்துகொண்டோம் என்கின்றார். "ஒப்பால், சோர்வில் அடையால்" என்ற தொடர்களுக்கு நாம் பழக்கவழியிற் பொருள் கொள்ளலாகாது. இங்கே எடுத்துக் காட்டுவமை அணி அன்று. ஒப்புமை அன்று. இரண்டு நிலைகளை ஒப்பநிறுத்திய நிலை ஒலியையும் பொருளையும் ஒப்ப நிறுத்திய நிலை
சிவஞான முனிவரின் நட்பியலுரை சிவஞான முனிவர் அபூர்வவிதி நியமவிதி பரிசங்கியாவிதி என்ற மூன்றையும் விரிவாகச் சொல்லி அமைத்தும் திருவருட்பயன் முதல் அதிகாரம் பதிமுதுநிலை என அமைக்கப்பெற்றும் அதன் நுட்பம் அமையாது போனமை போன்றே சிவஞான முனிவர் ' ' அந்தமே ஆதி என ஏகாரம் அமைத்து எழுதிய நட்பியலுரை யும் அறிஞர் பெருமக்களால் சிறப்புற எடுத்துப் பேசப்பெறாது அமைந்து போயினமை வருந்துதற் குரியதே . சிவஞான முனிவரின் இக்கருத்து சோமேசர் முதுமொழி வெண்பாவின் முதற்குறள் விளக்க அடிப்படையை ஒரு முறை உணர்ந்து படித்தார்களானால் அவர் அங்கே அத்தகைய வெண் பாவை அமைத்ததன் நோக்கம் மாபாடியத்தில் இன்ன இடத்தில் இன்ன பொருளை இதனை அமைப்பதற்காகவே என்பதை உணர வாய்ப்பு அமைந்துவிடும் . சீர்கொள் இறை ஒன்றுண்டு அத்தெய்வம் நீ என்று ஓப்பாற் சோர்வில் அடையால் தெளிந்தோம் சோமேசா -ஓரில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ' ' என்பதே சோமேசர் முதுமொழி வெண்பாவின் முதற்பாட்டு . இதனுள் முதலிரண்டு வரிகளின் பொருளை அமைத்துக் காணுதல் வேண்டும் . இங்கே திருக்குறளை அகரமுதல எழுத்தெல்லாம் என ஒரு பகுதியாக ஆதிபகவன் முதற்றே உலகு என ஒரு பகுதியாகத் தனித்தனியே நிறுத்திக் கொள்ளவேண்டும் . அப்படிநிறுத்திக் கொண்டதும் அவைகள் நின்றநிலை . சோர்வில் அடைமொழி பெற்றநிலை என்ற இரண்டு காரணங் களால் இரண்டு முடிவுகளை நாங்கள் தெரிந்துகொண்டோம் என்கின்றார் . ஒப்பால் சோர்வில் அடையால் என்ற தொடர்களுக்கு நாம் பழக்கவழியிற் பொருள் கொள்ளலாகாது . இங்கே எடுத்துக் காட்டுவமை அணி அன்று . ஒப்புமை அன்று . இரண்டு நிலைகளை ஒப்பநிறுத்திய நிலை ஒலியையும் பொருளையும் ஒப்ப நிறுத்திய நிலை