சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

S2 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் "நண்ணும் பொருள்மூன்றும் நானறிந்து நானற என் கண்ணும் தனதாகக் காட்டினான் - வெண்ணெயிலே மெய்கண்ட தேவனொரு மெய்கொண்டு வந்திலனேல் பொய்கொண்டு போமே புவி" சிவஞானபோதம் என்பதன் பொருள் "என்றலுமே சிவமேது ஞானமேது இங்கு இயம்பியிடும் போதமேது இயம்புவீரேல் அன்றுவட நீழலில் வந்திருந்தார் நீரே அடியேனும் உமக்கடிமை ஆவேன் என்ன நின்றசிவம் ஒன்று அதனைத் தேர்தல் ஞானம் நிகழ்போதம் தேர்ந்ததனைத் தெளிதல் ஆம் என்று ஒன்றியநற் பொருள் வினவி நிற்பார் சிந்தை உருகும்வகை உரைசெய்தார் உவமையில்லார்" மேலே குறிப்பிடப்பெற்ற நான்கும் வாதவூரடிகள் புராணத்தைச் சேர்ந்தவை. அடுத்து, வித்துவான் கா. மு. சுந்தரமுதலியார் அவர்கள் சிவஞானபோதம் பற்றி எழுதிய குறிப்பொன்று, தருமையாதீனப் பதிப்பாகிய, மெய்கண்ட சாத்திரங்கள் என்ற நூலின் 67ம் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு அமைக்கப் பெற்றுள்ளது. "இச்சிவஞானபோதம், சிவபெருமான் திருக்கரத்துட் கொண்டது. நந்தி தேவருக்கும், சனகாதிகளுக்கும், மாணிக்க வாசக சுவாமிகளுக்கும் உபதேசிக்கப் பெற்றது. சிறந்த சைவ சித்தாந்த ஞான முழுமுதல் நூலாய் விளங்குவது. விரிந்த பொருள்களையுடையது. எந்நூற்களிலும் இல்லாத மேலான விஷயங்களைத் தன்னகத்துட் கொண்டது. பன்னிரண்டு நூற் பாக்களையுடையது; நாற்பது அடிகளுடையது; இருநூற்றுப் பதினாறு சொற்களுடையது; அச்சொற்களுள் அறுநூற்று இருபத்து நான்கு எழுத்துக்கள் பெற்றது. ஒவ்வொரு வீட்டிலும் பூசித்துப் போற்றப் படுவது. ஒவ்வொருவரும் படித்துச் சிந்தித்துத் தெளிந்து முடிவான அத்துவித முத்தியைப் பெறுவதற்குரியது. சிவஞான சுவாமிகளால் சிற்றுரையும் பேருரையாகிய மாபாடி யமும் எழுதப் பெற்றது. எவர்களாலும் மறுக்கப்படாதது எச் சமய நூல்களுக்கும் அரசாய் விளங்குவது'' இனி, மெய்கண்டாரும் சிவஞானபோதமும் என்றதொரு செந்தமிழ் ஆய்வு நூலைத் திட்பமும் நுட்பமும்செறிய யாத்துத்
S2 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் நண்ணும் பொருள்மூன்றும் நானறிந்து நானற என் கண்ணும் தனதாகக் காட்டினான் - வெண்ணெயிலே மெய்கண்ட தேவனொரு மெய்கொண்டு வந்திலனேல் பொய்கொண்டு போமே புவி சிவஞானபோதம் என்பதன் பொருள் என்றலுமே சிவமேது ஞானமேது இங்கு இயம்பியிடும் போதமேது இயம்புவீரேல் அன்றுவட நீழலில் வந்திருந்தார் நீரே அடியேனும் உமக்கடிமை ஆவேன் என்ன நின்றசிவம் ஒன்று அதனைத் தேர்தல் ஞானம் நிகழ்போதம் தேர்ந்ததனைத் தெளிதல் ஆம் என்று ஒன்றியநற் பொருள் வினவி நிற்பார் சிந்தை உருகும்வகை உரைசெய்தார் உவமையில்லார் மேலே குறிப்பிடப்பெற்ற நான்கும் வாதவூரடிகள் புராணத்தைச் சேர்ந்தவை . அடுத்து வித்துவான் கா . மு . சுந்தரமுதலியார் அவர்கள் சிவஞானபோதம் பற்றி எழுதிய குறிப்பொன்று தருமையாதீனப் பதிப்பாகிய மெய்கண்ட சாத்திரங்கள் என்ற நூலின் 67 ம் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு அமைக்கப் பெற்றுள்ளது . இச்சிவஞானபோதம் சிவபெருமான் திருக்கரத்துட் கொண்டது . நந்தி தேவருக்கும் சனகாதிகளுக்கும் மாணிக்க வாசக சுவாமிகளுக்கும் உபதேசிக்கப் பெற்றது . சிறந்த சைவ சித்தாந்த ஞான முழுமுதல் நூலாய் விளங்குவது . விரிந்த பொருள்களையுடையது . எந்நூற்களிலும் இல்லாத மேலான விஷயங்களைத் தன்னகத்துட் கொண்டது . பன்னிரண்டு நூற் பாக்களையுடையது ; நாற்பது அடிகளுடையது ; இருநூற்றுப் பதினாறு சொற்களுடையது ; அச்சொற்களுள் அறுநூற்று இருபத்து நான்கு எழுத்துக்கள் பெற்றது . ஒவ்வொரு வீட்டிலும் பூசித்துப் போற்றப் படுவது . ஒவ்வொருவரும் படித்துச் சிந்தித்துத் தெளிந்து முடிவான அத்துவித முத்தியைப் பெறுவதற்குரியது . சிவஞான சுவாமிகளால் சிற்றுரையும் பேருரையாகிய மாபாடி யமும் எழுதப் பெற்றது . எவர்களாலும் மறுக்கப்படாதது எச் சமய நூல்களுக்கும் அரசாய் விளங்குவது ' ' இனி மெய்கண்டாரும் சிவஞானபோதமும் என்றதொரு செந்தமிழ் ஆய்வு நூலைத் திட்பமும் நுட்பமும்செறிய யாத்துத்