சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர், காட்டும் முதல் வித்தை தந்த கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் மெய்கண்ட தேவரின் காலத்தைக் கல்வெட்டு முதலியன கொண்டு நிறுவியதோடன்றி, மெய்கண்டார் ஆண்டு என்ற கணக்கு ஐப்பசி மாதச் சுவாதி முதலாகக் கொண்டு தொடங்கப் பெற்றதற்கான சான்று உண்டு எனவும் எடுத்துக் காட்டியுள்ளார்கள். அத்தகைய நாள் சித்தாந்த சைவர்களின் பொற்காலமாக இருந்திருத்தல் வேண்டும். மேலும், 53 "ஆதிமறைக் கருத்துக்களைச் சிறுபான்மை உள்ளடக்கிய வடமொழி உபநிடதங்களுட் போந்த 'அத்துவிதம் என்னும் சொல்லிற்குப் பொருள் இன்னதென்று தெரியாமல் அறிவு நூல் கற்போர் பலரும் மயங்கித் தியங்கினர். அம்மயக்கந் தீர்த்தற் பொருட்டும் சிவபெருமானது திருவருளினால் மெய்கண்ட சந்தானம் இத்தமிழ் நாட்டில் ஏற்பட்டதாகத் தெரிகின்றோம். "நல்வியாத முனியுரைசெய் சூத்திரத்தின் பாடியமோர் நான்குங் கொண்ட சொல்வாய்மை பொருள்வாய்மை தெளிதலுற்றது ஓராது சோக முற்றோர் எல்லாரும் அத்துவித சுத்தநிலை இனிதெய்திச் சோக மேயப் பொல்லாத சமயிகளும் அதிசயிப்பப் புவனியிசைப் போத மேற" என்று சந்தானாசாரிய புராண சங்கிரகத் திருப்பாட் டொன்றைச் சான்று காட்டி "அத்துவித விளக்கம்'' அமைத்தது சிவஞான போதத்தின், மெய்கண்டாரின் தனிச்சிறப்பு" என்பதாகத் திரு. எம்.எல்.பிள்ளையவர்களே அமைத்துக் காட்டியுள்ளார்கள். இவ்வாறு சிவஞானபோதம்' என்ற ஒரு பெயராலேயே இத் தத்துவக் கொள்கை பேசப்பெற்று வருகிறது என்கிற மரபு முறையை ஆய்வின் அடிப்படையில் மட்டுமேயன்றி அருள் உணர் வுடனும் நோக்குகின்றார் சிவஞானமுனிவர். அடுத்து மெய்கண்டான் என்ற சொல்லாட்சியையும், அப் பெயர் பற்றி வரும் விளக்கங்களையும் தம்மகத்தே கொண்ட தோடு, மெய்கண்டாருக்குக் காலத்தால் முன்னும் பின்னுமாக அமைந்த சாத்திர நூல்கள் பதினான்கையும் மெய்கண்ட சாத்திரம் என மெய்கண்டார் பெயரை முன்னிட்டுக் கொண்டே தொகுத் தமைத்துள்ள மரபு முறையையும் செவ்விதின் நோக்குகின்றார் சிவஞானமுனிவர்,
சிவஞான முனிவர் காட்டும் முதல் வித்தை தந்த கா . சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் மெய்கண்ட தேவரின் காலத்தைக் கல்வெட்டு முதலியன கொண்டு நிறுவியதோடன்றி மெய்கண்டார் ஆண்டு என்ற கணக்கு ஐப்பசி மாதச் சுவாதி முதலாகக் கொண்டு தொடங்கப் பெற்றதற்கான சான்று உண்டு எனவும் எடுத்துக் காட்டியுள்ளார்கள் . அத்தகைய நாள் சித்தாந்த சைவர்களின் பொற்காலமாக இருந்திருத்தல் வேண்டும் . மேலும் 53 ஆதிமறைக் கருத்துக்களைச் சிறுபான்மை உள்ளடக்கிய வடமொழி உபநிடதங்களுட் போந்த ' அத்துவிதம் என்னும் சொல்லிற்குப் பொருள் இன்னதென்று தெரியாமல் அறிவு நூல் கற்போர் பலரும் மயங்கித் தியங்கினர் . அம்மயக்கந் தீர்த்தற் பொருட்டும் சிவபெருமானது திருவருளினால் மெய்கண்ட சந்தானம் இத்தமிழ் நாட்டில் ஏற்பட்டதாகத் தெரிகின்றோம் . நல்வியாத முனியுரைசெய் சூத்திரத்தின் பாடியமோர் நான்குங் கொண்ட சொல்வாய்மை பொருள்வாய்மை தெளிதலுற்றது ஓராது சோக முற்றோர் எல்லாரும் அத்துவித சுத்தநிலை இனிதெய்திச் சோக மேயப் பொல்லாத சமயிகளும் அதிசயிப்பப் புவனியிசைப் போத மேற என்று சந்தானாசாரிய புராண சங்கிரகத் திருப்பாட் டொன்றைச் சான்று காட்டி அத்துவித விளக்கம் ' ' அமைத்தது சிவஞான போதத்தின் மெய்கண்டாரின் தனிச்சிறப்பு என்பதாகத் திரு . எம்.எல்.பிள்ளையவர்களே அமைத்துக் காட்டியுள்ளார்கள் . இவ்வாறு சிவஞானபோதம் ' என்ற ஒரு பெயராலேயே இத் தத்துவக் கொள்கை பேசப்பெற்று வருகிறது என்கிற மரபு முறையை ஆய்வின் அடிப்படையில் மட்டுமேயன்றி அருள் உணர் வுடனும் நோக்குகின்றார் சிவஞானமுனிவர் . அடுத்து மெய்கண்டான் என்ற சொல்லாட்சியையும் அப் பெயர் பற்றி வரும் விளக்கங்களையும் தம்மகத்தே கொண்ட தோடு மெய்கண்டாருக்குக் காலத்தால் முன்னும் பின்னுமாக அமைந்த சாத்திர நூல்கள் பதினான்கையும் மெய்கண்ட சாத்திரம் என மெய்கண்டார் பெயரை முன்னிட்டுக் கொண்டே தொகுத் தமைத்துள்ள மரபு முறையையும் செவ்விதின் நோக்குகின்றார் சிவஞானமுனிவர்