சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் காட்டும் முதல் வித்தை +247 "எவ்வெவகோட் படுபொருளும் அஞ்செழுத்தின் அடக்கி அவற்று இயல்பு காட்டி மெய் வகை அஞ்சவத்தையினும் நிற்கு முறை ஓதுமுறை விளங்கத் தோற்றி அவ்வெழுத்தின் உள்ளீடும் அறிவித்துச் சிவபோகத் தழுத்தி நாயேன் செய்வினையுங் கைக்கொண்ட வேலப்ப தேசிகன் தாள் சென்னி சேர்ப்பாம்" :57 எனத் தம் உபதேச குருவின் மேல் பாடிய பாடற் கருத்தும் இணைய நிறுத்திய சுவாமிகள் தம் உள்ளக்கிடக்கையைத் தெளிவுற அறியலாம். இவ்விடத்தில் அஞ்செழுத்து என்பது 'சிவாய' என்ற முத்தி பஞ்சாக்கரமே என்றும், விதிப்படி உச்சரிக்கும் முறைபற்றிச் சுவாமி கள் அருளும் கருத்தும், அவர்தம் நடையிலேயே படிக்கப் படிக்கச் சுவை ஊறி இன்பம் பயப்பதாம். ஈண்டு விரிப்பிற் பெருகும். முனிவரின் வரையறைகள் இனி, சிவஞான சுவாமிகள் சிவஞான போதத்துக்குப் பேருரை எழுத முற்படும் போது, பன்னிரண்டு நூற்பாக்களை மட்டுமே கொள்ளாது அதிகரணப் பொழிப்பு, ஏது, எடுத்துக்காட்டுக்கள் ஆகிய அனைத்தையும் மெய்கண்டார் அருளிய அருளிப்பாடுகள் எனவே கொண்டு அவை தம்மையெல்லாம் முன்பின் முரணாவாறு அமைத்துக் கொள்ளும் பெற்றியை நாம் உடன்கொள்ள வேண்டும். ஏனைய உரையாசிரியர்களைப் போல நூற்பாவை மட்டுமே மெய்கண்டார் வாக்கு என்றும், ஏது முதலியவைகளும் எடுத்துக் காட்டு வெண்பாக்களும் பாடங்கேட்டவர்கள் பாடம் கேட்கும் காலத்தே எழுதி வைத்தவை எனத் தள்ளி விட்டு உரை கொள்ளும் போக்கைப் பின்பற்றவில்லை.. 1 2 மேலும், உடனிருந்து நேர்முக மாணாக்கராயிருந்து பாடங் கேட்ட அருணந்தி சிவாசாரியாரின் திருவாக்குக்களைப் பல்லாற்றால் ஆய்ந்து நோக்கி அமைத்துக் கொள்வதும், நேர்முக மாணாக்கராயில்லையாயினும் மாணாக்கரின் மாணாக்கர் என்ற வகையில் சார்பு நூல் செய்த உமாபதி சிவாசாரியாரையும், அவ்வாறே நேர்முக மாணாக்கர்களாயமைந்து நூல் செய்த திருவதிகை மனவாசகம் கடந்தார். சிற்றம்பல நாடிகள் ஆகியோர்
சிவஞான முனிவர் காட்டும் முதல் வித்தை +247 எவ்வெவகோட் படுபொருளும் அஞ்செழுத்தின் அடக்கி அவற்று இயல்பு காட்டி மெய் வகை அஞ்சவத்தையினும் நிற்கு முறை ஓதுமுறை விளங்கத் தோற்றி அவ்வெழுத்தின் உள்ளீடும் அறிவித்துச் சிவபோகத் தழுத்தி நாயேன் செய்வினையுங் கைக்கொண்ட வேலப்ப தேசிகன் தாள் சென்னி சேர்ப்பாம் : 57 எனத் தம் உபதேச குருவின் மேல் பாடிய பாடற் கருத்தும் இணைய நிறுத்திய சுவாமிகள் தம் உள்ளக்கிடக்கையைத் தெளிவுற அறியலாம் . இவ்விடத்தில் அஞ்செழுத்து என்பது ' சிவாய ' என்ற முத்தி பஞ்சாக்கரமே என்றும் விதிப்படி உச்சரிக்கும் முறைபற்றிச் சுவாமி கள் அருளும் கருத்தும் அவர்தம் நடையிலேயே படிக்கப் படிக்கச் சுவை ஊறி இன்பம் பயப்பதாம் . ஈண்டு விரிப்பிற் பெருகும் . முனிவரின் வரையறைகள் இனி சிவஞான சுவாமிகள் சிவஞான போதத்துக்குப் பேருரை எழுத முற்படும் போது பன்னிரண்டு நூற்பாக்களை மட்டுமே கொள்ளாது அதிகரணப் பொழிப்பு ஏது எடுத்துக்காட்டுக்கள் ஆகிய அனைத்தையும் மெய்கண்டார் அருளிய அருளிப்பாடுகள் எனவே கொண்டு அவை தம்மையெல்லாம் முன்பின் முரணாவாறு அமைத்துக் கொள்ளும் பெற்றியை நாம் உடன்கொள்ள வேண்டும் . ஏனைய உரையாசிரியர்களைப் போல நூற்பாவை மட்டுமே மெய்கண்டார் வாக்கு என்றும் ஏது முதலியவைகளும் எடுத்துக் காட்டு வெண்பாக்களும் பாடங்கேட்டவர்கள் பாடம் கேட்கும் காலத்தே எழுதி வைத்தவை எனத் தள்ளி விட்டு உரை கொள்ளும் போக்கைப் பின்பற்றவில்லை .. 1 2 மேலும் உடனிருந்து நேர்முக மாணாக்கராயிருந்து பாடங் கேட்ட அருணந்தி சிவாசாரியாரின் திருவாக்குக்களைப் பல்லாற்றால் ஆய்ந்து நோக்கி அமைத்துக் கொள்வதும் நேர்முக மாணாக்கராயில்லையாயினும் மாணாக்கரின் மாணாக்கர் என்ற வகையில் சார்பு நூல் செய்த உமாபதி சிவாசாரியாரையும் அவ்வாறே நேர்முக மாணாக்கர்களாயமைந்து நூல் செய்த திருவதிகை மனவாசகம் கடந்தார் . சிற்றம்பல நாடிகள் ஆகியோர்