சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

58 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் உரை எழுதும் தரும் விளக்கங்களையும் ஆங்காங்கே இணைத்துக் காட்டியே உரை எழுதும் போக்கை மேற் கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக, திருமுறைகள் என நின்ற அருளாளர் தம் திருவாக்குக்களுக்கு இணைப்புக் காட்டியே பெற்றியை மேற் கொண்டவர் என்பதும் தமக்கெனஓர் உரை அமைப்புக் கொள் உருவாக்கி அமைத்துக் கொண்டவர் அவர் என்பதும் அவரை அளந்தறியும் நோக்கில் அமைத்துக் கொண்ட விளக்கங் களாக அமைத்துக் கொள்ளல் வேண்டும். கையை இனி, சிவஞான முனிவர் ஒரு மாபாடியகாரர் என்பதை நிலை நாட்டும் வகையில் அவர் எழுதிய உரைப்பகுதி ஒன்றைச் சான்றாக எடுத்துக் காட்டி விளக்குதல் அறிஞர் மரபு. அதனையும் நாம் ஆய்ந்து கண்டு முன்னிறுத்திக் கொள்ளுதல் வேண்டும். அப்பகுதி கீழே தரப்பெறுகின்றது. கலப்பு என்னும் சொல் விளக்கம் சிவஞானபோத இரண்டாம் நூற்பாவின் முதல் அதிகரணத் தின் கீழ் இப்பேருரை அமைகிறது. "முதல்வன் ஐந்தொழில் செய்தல் தன் பொருட்டோ? பிறர் பொருட்டோ? வீணோ? தன் பொருட்டெனின், வரம்பிலின்ப முடைய முதல்வனுக்கு இச்செய்கையால் வரக்கடவதோர் பயன் இல்லை. உயிர்களின் பொருட்டெனின், உயிர்களும் அவனும் அபேதமோ, பேதமோ, பேதாபேதமோ? பொன்னும் பணியும் போல் அபேதமாலின் அது தன் பொருட்டேயாம். இருளும் வெளி யும் போற் பேதமாயின், அவ்வுயிர்களின் பொருட்டு ஐந்தொழில் செய்தற்கு ஒருவாற்றான் இயைபில்லை. சொல்லுப் பொருளும் போற் பேதாபேதம் எனின், அபேதமும் (ஆம்) பேதமும் ஆம் என்றல் சமணர் கூறும் அநேகாந்த வாதம் ஆகும். சொல்லும் பொருளும் வேறேயாயினும் சொல் வந்து எழலும் பொருள் தோன்றுதல் பற்றி அபேதம் என்பார் மதத்தை ஒருவாற்றான் உடம்பட்டுப் பேதாபேதம் என்னும் துணையன்றி, ஒரு பொருட்கு இரண்டு தன்மை கோடல் பொருந்தாமையின் அது போலியேயாம். இங்ஙனமாகலின், பிறர் பொருட்டென்பது பொருந்தாது, இனி' அவ்வாறன்றி வீண் எனின், பித்தர் செய்யும் தொழிலோடு ஒக்கும். பித்தரேயன்றி, அறிவால் முதிர்ந்த அரையர் (அரசர்) முதலியோரும் உயிர்த்தல், வட்டையாடுதல், சூதாடுதல், இமைத்தல், ஆவித்தல், தும்முதல் முதலிய வீண் தொழில் செய்யக்.
58 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் உரை எழுதும் தரும் விளக்கங்களையும் ஆங்காங்கே இணைத்துக் காட்டியே உரை எழுதும் போக்கை மேற் கொண்டவர் . எல்லாவற்றுக்கும் மேலாக திருமுறைகள் என நின்ற அருளாளர் தம் திருவாக்குக்களுக்கு இணைப்புக் காட்டியே பெற்றியை மேற் கொண்டவர் என்பதும் தமக்கெனஓர் உரை அமைப்புக் கொள் உருவாக்கி அமைத்துக் கொண்டவர் அவர் என்பதும் அவரை அளந்தறியும் நோக்கில் அமைத்துக் கொண்ட விளக்கங் களாக அமைத்துக் கொள்ளல் வேண்டும் . கையை இனி சிவஞான முனிவர் ஒரு மாபாடியகாரர் என்பதை நிலை நாட்டும் வகையில் அவர் எழுதிய உரைப்பகுதி ஒன்றைச் சான்றாக எடுத்துக் காட்டி விளக்குதல் அறிஞர் மரபு . அதனையும் நாம் ஆய்ந்து கண்டு முன்னிறுத்திக் கொள்ளுதல் வேண்டும் . அப்பகுதி கீழே தரப்பெறுகின்றது . கலப்பு என்னும் சொல் விளக்கம் சிவஞானபோத இரண்டாம் நூற்பாவின் முதல் அதிகரணத் தின் கீழ் இப்பேருரை அமைகிறது . முதல்வன் ஐந்தொழில் செய்தல் தன் பொருட்டோ ? பிறர் பொருட்டோ ? வீணோ ? தன் பொருட்டெனின் வரம்பிலின்ப முடைய முதல்வனுக்கு இச்செய்கையால் வரக்கடவதோர் பயன் இல்லை . உயிர்களின் பொருட்டெனின் உயிர்களும் அவனும் அபேதமோ பேதமோ பேதாபேதமோ ? பொன்னும் பணியும் போல் அபேதமாலின் அது தன் பொருட்டேயாம் . இருளும் வெளி யும் போற் பேதமாயின் அவ்வுயிர்களின் பொருட்டு ஐந்தொழில் செய்தற்கு ஒருவாற்றான் இயைபில்லை . சொல்லுப் பொருளும் போற் பேதாபேதம் எனின் அபேதமும் ( ஆம் ) பேதமும் ஆம் என்றல் சமணர் கூறும் அநேகாந்த வாதம் ஆகும் . சொல்லும் பொருளும் வேறேயாயினும் சொல் வந்து எழலும் பொருள் தோன்றுதல் பற்றி அபேதம் என்பார் மதத்தை ஒருவாற்றான் உடம்பட்டுப் பேதாபேதம் என்னும் துணையன்றி ஒரு பொருட்கு இரண்டு தன்மை கோடல் பொருந்தாமையின் அது போலியேயாம் . இங்ஙனமாகலின் பிறர் பொருட்டென்பது பொருந்தாது இனி ' அவ்வாறன்றி வீண் எனின் பித்தர் செய்யும் தொழிலோடு ஒக்கும் . பித்தரேயன்றி அறிவால் முதிர்ந்த அரையர் ( அரசர் ) முதலியோரும் உயிர்த்தல் வட்டையாடுதல் சூதாடுதல் இமைத்தல் ஆவித்தல் தும்முதல் முதலிய வீண் தொழில் செய்யக் .