சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் அனுபவம் பெறும். அப்பொழுதே இதுவரை திரோதானமாக நின்ற சத்தி அருளாய் நின்று இன்ப அன்பாய் விளங்கும். 64 அந்நிலையில், எந்த ஒரு மறைப்பாலும் மடங்காது முதல் வனின் தற்றரும தருமியாய் அவன் வியாபகத்துள் வியாப்பியமாய் நின்று, அவன் இச்சாஞானக் கிரியைகளின் கீழ்நின்று, முதலால் உணரும் போதநிலையில், போதானந்தப் பொருளாய் நின்று உணர்ந்த முடிவுகளே சித்தாந்தம் எனவும் மெய்கண்ட நூல்கள் எனவும் அமைந்தன. அவைகளே சிவஞான போதம் ஆயின. 1.* பெத்தம் முத்தி எனப் பெறும் இரண்டு நிலைகளிலும் ஒரு தன்மைத்தாய் அமைந்த சுத்தாத்துவித அனுபவ நிலையில் நின்று, தம்முடைய முதலால் உணரும் போதானந்தப் பொருளனு பவ ஞானமே முதல் வித்தை-முதலால் உணரும் வித்தை என்ற பொருளில் அமைகிறது. முடிப்புரை சிவதத்துவ விவேகத்துள், சிவஞான சுவாமிகளாற் குறித்துக் கூறப் பெற்ற 'முதல் வித்தை’ என்பது ஆன்மாவானது தமது முதலால் உணரும் வித்தை எனப் பொருள்பட்டு, அதுவே, இறவாத இன்ப அன்பு நிலையை உள்ளிட்ட போதானந்தப் பொருளனுபவமாகும் என்று கொள்ளுதல், அதன் அடுத்த செய் யுளில் அவராற் கொள்ளப் பெறும் நட்பியலுரை' என்பத னோடும் பொருத்தமுற அமையும்.
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் அனுபவம் பெறும் . அப்பொழுதே இதுவரை திரோதானமாக நின்ற சத்தி அருளாய் நின்று இன்ப அன்பாய் விளங்கும் . 64 அந்நிலையில் எந்த ஒரு மறைப்பாலும் மடங்காது முதல் வனின் தற்றரும தருமியாய் அவன் வியாபகத்துள் வியாப்பியமாய் நின்று அவன் இச்சாஞானக் கிரியைகளின் கீழ்நின்று முதலால் உணரும் போதநிலையில் போதானந்தப் பொருளாய் நின்று உணர்ந்த முடிவுகளே சித்தாந்தம் எனவும் மெய்கண்ட நூல்கள் எனவும் அமைந்தன . அவைகளே சிவஞான போதம் ஆயின . 1. * பெத்தம் முத்தி எனப் பெறும் இரண்டு நிலைகளிலும் ஒரு தன்மைத்தாய் அமைந்த சுத்தாத்துவித அனுபவ நிலையில் நின்று தம்முடைய முதலால் உணரும் போதானந்தப் பொருளனு பவ ஞானமே முதல் வித்தை - முதலால் உணரும் வித்தை என்ற பொருளில் அமைகிறது . முடிப்புரை சிவதத்துவ விவேகத்துள் சிவஞான சுவாமிகளாற் குறித்துக் கூறப் பெற்ற ' முதல் வித்தை என்பது ஆன்மாவானது தமது முதலால் உணரும் வித்தை எனப் பொருள்பட்டு அதுவே இறவாத இன்ப அன்பு நிலையை உள்ளிட்ட போதானந்தப் பொருளனுபவமாகும் என்று கொள்ளுதல் அதன் அடுத்த செய் யுளில் அவராற் கொள்ளப் பெறும் நட்பியலுரை ' என்பத னோடும் பொருத்தமுற அமையும் .