சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

66 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் குறிக்க எழுந்த வழக்காறுகளே. அவ்வகையில் சித்தாந்த சைவத்தை ‘அத்வைதம்' என்பதனோடு இணைத்த எப்பெயரால் வழங்குவது என்பது ஒரு வினா. அப்படிக்குறித்து வழங்க வேண்டிய நிலை வைதிக வழிவந்த மெய்ப்பொருட் கொள்கைகளுக்கே அமையும். சிவாகம வழி வந்த சித்தாந்த சைவத்தை அத்தகைய பெயரமைப்பில் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைப் பொதுவிடையாக எடுத்து வழங்கி விடுவது உண்டு. அவ்வகையில் எழும் ஆய்வை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே இப்பகுதி. சிவஞான சித்தியார் சிவஞானபோதத்துக்கு வழிநூல் என்ற முறையில் அமைந்த சிவஞானசித்தியார், சுபக்கம், பதினொன்றாம் சூத்திரப் பொருள் அமைப்பில் சுத்தாத்துவிதம் என்ற தலைப்பில் ஆறு திருவிருத்தங் கள் காணப்பெறுசின்றன. சிவப்பிரகாசம் உமாபதி சிவாசாரியார் அருளிய சிவப்பிரகாசம் சார்பு நூல் எனக் கொள்ளும் மரபு வழக்கு உண்டு. சிவப்பிரகாசம் என்னும் நூல் நுதலிய பொருள் என்பதாக அமைந்த விருத்தம் சித்தாந்தக் கொள்கையின் பெருமையை வரையறை செய்துணர்த்தும் ஒரு கண்ணாடி என அனைவராலும் எடுத்துக் காட்டப் பெறும் பெருமையுடையது. "புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய் புகல் அளவைக்கு அளவாகிப் பொற்பணி போல் அபேதப் பிறப்பிலதாய் இருள் வெளிபோற் பேதமும் சொற்பொருள் போல் பேதாபேதமும் இன்றிப் பெருநூல் சொன்ன அறத்திறனால் விளைவதாய் உடலுயிர் கண் அருக்கன் அறிவொளி போல் பிறிவரும் அத்துவிதமாகும் சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கலுற்றாம்’” இச்செய்யுளில் அமைந்த 'பிறிவரும் அத்துவிதம்' என்ற தொடரில் பிரிவு என இடையினமே இருக்க வேண்டும். ஆனால், எல்லா இடங் களிலும் - செய்யுளிலேயன்றி உரைநடையிலும் - எழுதுகிற சான் றோர்களெல்லாம் வல்லினம் அமைத்தே 'பிறிவரும் அத்துவிதம்’ என எழுதுவதே வழக்காக அமைந்துள்ளது.
66 சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் குறிக்க எழுந்த வழக்காறுகளே . அவ்வகையில் சித்தாந்த சைவத்தை அத்வைதம் ' என்பதனோடு இணைத்த எப்பெயரால் வழங்குவது என்பது ஒரு வினா . அப்படிக்குறித்து வழங்க வேண்டிய நிலை வைதிக வழிவந்த மெய்ப்பொருட் கொள்கைகளுக்கே அமையும் . சிவாகம வழி வந்த சித்தாந்த சைவத்தை அத்தகைய பெயரமைப்பில் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைப் பொதுவிடையாக எடுத்து வழங்கி விடுவது உண்டு . அவ்வகையில் எழும் ஆய்வை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே இப்பகுதி . சிவஞான சித்தியார் சிவஞானபோதத்துக்கு வழிநூல் என்ற முறையில் அமைந்த சிவஞானசித்தியார் சுபக்கம் பதினொன்றாம் சூத்திரப் பொருள் அமைப்பில் சுத்தாத்துவிதம் என்ற தலைப்பில் ஆறு திருவிருத்தங் கள் காணப்பெறுசின்றன . சிவப்பிரகாசம் உமாபதி சிவாசாரியார் அருளிய சிவப்பிரகாசம் சார்பு நூல் எனக் கொள்ளும் மரபு வழக்கு உண்டு . சிவப்பிரகாசம் என்னும் நூல் நுதலிய பொருள் என்பதாக அமைந்த விருத்தம் சித்தாந்தக் கொள்கையின் பெருமையை வரையறை செய்துணர்த்தும் ஒரு கண்ணாடி என அனைவராலும் எடுத்துக் காட்டப் பெறும் பெருமையுடையது . புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய் புகல் அளவைக்கு அளவாகிப் பொற்பணி போல் அபேதப் பிறப்பிலதாய் இருள் வெளிபோற் பேதமும் சொற்பொருள் போல் பேதாபேதமும் இன்றிப் பெருநூல் சொன்ன அறத்திறனால் விளைவதாய் உடலுயிர் கண் அருக்கன் அறிவொளி போல் பிறிவரும் அத்துவிதமாகும் சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கலுற்றாம் இச்செய்யுளில் அமைந்த ' பிறிவரும் அத்துவிதம் ' என்ற தொடரில் பிரிவு என இடையினமே இருக்க வேண்டும் . ஆனால் எல்லா இடங் களிலும் - செய்யுளிலேயன்றி உரைநடையிலும் - எழுதுகிற சான் றோர்களெல்லாம் வல்லினம் அமைத்தே ' பிறிவரும் அத்துவிதம் என எழுதுவதே வழக்காக அமைந்துள்ளது .