சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் ‘ஏவ’ என்பதால் ஒருமரம் அதேபோன்ற மற்றொரு மரத்தின் வேறாக இருப்பது போன்ற சஜாதீய பேதம் இல்லாதது என்றும்; 70 அத்துவிதம் என்பதால் தண்ணீருக்கு மாறாக நெருப்பிருத்தல் போல விஜாதீய பேதமும் இல்லாதது என்றும் கொண்டு, கேவலம் எனநின்ற அப்பொருளுக்கு ஏகம் என்பது உடன்பாட்டு முகமான விசேஷணம் என்றும் அத்துவிதம் என்பது எதிர்மறை இயலான விசேஷணம் என்றும் விளக்கம் கூறுவர். முடிந்த முடிபாக, தன்னின் வேறாக ஒரு பொருளும் இன்றித் தானும் குணமுடைப் பொருளென விசேடிக்கப்படுதல் இன்றி நிர்விசேஷமாய் நிற்கும் பரப்பிரமப் பொருள் கேவலம்-என்பது அத்துவிதம் என்னும் சொற்குப்பொருள் எனக் கொள்வதால், அக்கொள்கை கேவலாத்வைதம் என்ற பெயரைப் பெற்றது. அவ்வாறே விசிட்டாத்வைதத்தையும் காணலாம். இது இராமானுசரின் கொள்கை. நீலகண்ட" பாடியத்துள் காட்டப் பெறும் சிவாத்வைதமும் அதையொட்டியதே. இவ்விரண்டிலும் சங்கரரைப் போலவே அத்துவிதம் என்ற சொல்லுக்கு இன்மை என்ற பொருளில் இரண்டு இல்லை; ஒன்று எனவே கொள்வர். ஆயினும் சங்கரரைப் போல நிர்க்குணம், நிர்விசேஷம் என்பதாக அப்பொருளைக் கொள்ளுதல் பொருந்தாது. சத்தி சங்கற்பம் முதலிய குணங்கள் பரப்பிரமப்பொருட்கு உண்டு என உபநிடதங் கள் கூறலான், அவைகளோடு முரண்பட்டுக் 'கேவல அத்வைதம்' எனப் பொருள் கொள்ளல் பொருந்தாது. தன்னோடு இயைபுடைய பசு, பாசங்களானும், தன் குணங் களாகிய சத்தி, சங்கற்பம் முதலியவைகளாலும் விசேடிக்கப்பட்டு, விசிட்டமாய் (அவைகளைத் தன்னுள் அடக்கியதாய்) நின்ற பரப் பிரமம் இரண்டில்லை; ஒன்றே எனக் கொள்வதே அத்துவிதம் என்னும் சொற்குப் பொருள் எனக் கொண்டார். அதனால் இராமானுசரின் கொள்கை விசிட்ட அத்வைதம் எனப் பெற்றது. அவ்வாறே குணவிசேடமுடைய, ஏனைய பசு பாசங்களைத் தன் அகநிலையிற் கொண்டு, விசேஷ விளக்கம் உடையது என்ற வகையில் நின்ற சிவம் இரண்டில்லை, ஒன்று என்பதே அத்துவிதம் என்னும் சொற்குப் பொருளாகக் கொள்ளலின் அக்கொள்கை சிவாத்வைதம் எனப் பெற்றது.
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் ஏவ என்பதால் ஒருமரம் அதேபோன்ற மற்றொரு மரத்தின் வேறாக இருப்பது போன்ற சஜாதீய பேதம் இல்லாதது என்றும் ; 70 அத்துவிதம் என்பதால் தண்ணீருக்கு மாறாக நெருப்பிருத்தல் போல விஜாதீய பேதமும் இல்லாதது என்றும் கொண்டு கேவலம் எனநின்ற அப்பொருளுக்கு ஏகம் என்பது உடன்பாட்டு முகமான விசேஷணம் என்றும் அத்துவிதம் என்பது எதிர்மறை இயலான விசேஷணம் என்றும் விளக்கம் கூறுவர் . முடிந்த முடிபாக தன்னின் வேறாக ஒரு பொருளும் இன்றித் தானும் குணமுடைப் பொருளென விசேடிக்கப்படுதல் இன்றி நிர்விசேஷமாய் நிற்கும் பரப்பிரமப் பொருள் கேவலம் - என்பது அத்துவிதம் என்னும் சொற்குப்பொருள் எனக் கொள்வதால் அக்கொள்கை கேவலாத்வைதம் என்ற பெயரைப் பெற்றது . அவ்வாறே விசிட்டாத்வைதத்தையும் காணலாம் . இது இராமானுசரின் கொள்கை . நீலகண்ட பாடியத்துள் காட்டப் பெறும் சிவாத்வைதமும் அதையொட்டியதே . இவ்விரண்டிலும் சங்கரரைப் போலவே அத்துவிதம் என்ற சொல்லுக்கு இன்மை என்ற பொருளில் இரண்டு இல்லை ; ஒன்று எனவே கொள்வர் . ஆயினும் சங்கரரைப் போல நிர்க்குணம் நிர்விசேஷம் என்பதாக அப்பொருளைக் கொள்ளுதல் பொருந்தாது . சத்தி சங்கற்பம் முதலிய குணங்கள் பரப்பிரமப்பொருட்கு உண்டு என உபநிடதங் கள் கூறலான் அவைகளோடு முரண்பட்டுக் ' கேவல அத்வைதம் ' எனப் பொருள் கொள்ளல் பொருந்தாது . தன்னோடு இயைபுடைய பசு பாசங்களானும் தன் குணங் களாகிய சத்தி சங்கற்பம் முதலியவைகளாலும் விசேடிக்கப்பட்டு விசிட்டமாய் ( அவைகளைத் தன்னுள் அடக்கியதாய் ) நின்ற பரப் பிரமம் இரண்டில்லை ; ஒன்றே எனக் கொள்வதே அத்துவிதம் என்னும் சொற்குப் பொருள் எனக் கொண்டார் . அதனால் இராமானுசரின் கொள்கை விசிட்ட அத்வைதம் எனப் பெற்றது . அவ்வாறே குணவிசேடமுடைய ஏனைய பசு பாசங்களைத் தன் அகநிலையிற் கொண்டு விசேஷ விளக்கம் உடையது என்ற வகையில் நின்ற சிவம் இரண்டில்லை ஒன்று என்பதே அத்துவிதம் என்னும் சொற்குப் பொருளாகக் கொள்ளலின் அக்கொள்கை சிவாத்வைதம் எனப் பெற்றது .