சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சுத்தாத்வைதம் ஆண்டுக் கியைபில்லாத சடப்பிரபஞ்சத்தை வருவித்துரைத்தல் பொருந்தாமை அறிக." என்று எழுதி இந்நூற்பா மகாவாக்கியப் பொருளை உணர்த்தும் உட்கிடக்கையைக் கொண்டது என அமைத்துக் காட்டினார். இவ்வமைப்புக்கு வழிநூலாசிரியர் கூற்றோ, புடைநூலாசிரியர் கூற்றோ கைகொடுக்கவில்லை என்பதையும் நாம் உணரலாம். 73 தத்துவமசி முதலிய மகாவாக்கியப் பொருளே ஈண்டு எடுத் தோதினார் என அமைத்தால் அவனே தானே ஆகிய அந்நெறி என்பதும் அப்பொருள் படவந்ததுதானே என்ற வினா அமையும் ஆதலின், கூறியது கூறல் குற்றம் வரும் என உடன்கொண்டு, இப் பொருளையே பயன் ஒத்தினுள் அநுவதித்துக் கூறி அமைத்தார் என நிறுத்தி, அது கூறியது கூறல் என்னும் குற்றம் நோக்கியதன்று, ஒரு பயன் நோக்கி மீண்டும் எடுத்துக் கூறும் அநுவாத முறை எனவும் அமைத்துக் காட்டினார். மகாவாக்கியப் பொருளே ஈண்டு எடுத்தோதினார் என்ற. கூற்றை வலிமைப்படுத்தியவுடன், பொருள்கள் நிற்கும் நிலைமை யின் அமைந்த உறவு முறையே இவண் விளக்கமுற்படுவது என்பது வெளிப்பட அமைந்த கருத்தாகின்றது. அடுத்து, 'ஏகம் ஏவ அத்விதீயம்' என்ற வாக்கியம், பொருள் இலக்கணம் கூற எழுந்ததாகவே அமைத்து, அனைத்து ஆசாரியன் மார்களாலும் உரைகொள்ளப் பெறவும், அதற்கு மாறாக, 'அத்து விதம்' என்பது பொருளிலக்கணம் புலப்படுத்த வந்ததன்று பொருள் பிறவற்றோடு உறவு கொண்டு நின்ற நிலையைக் குறிக்க வந்த சொல்லே, என அமைத்துக் காட்டும் வன்மை சிவஞான சுவாமிகளுக்கே அமைந்த தனித்திறன். அத்வைதம் என்பதன் விளக்கம் அத்வைதம் பொருள் இலக்கணம் உணர்த்தும் சொல் என்பதே பொதுக்கொள்கை. ஆனால், பொருள் பிறவற்றோடு நின்ற உறவைக் குறிக்கும் சொல்லே அத்வைதம் என்பது சிவஞான முனிவர் கொள்கையாகிறது. இனி, அத்துவிதம் என்னும் சொல்லுக்குச் சம்பந்த விசேடம் உணர்த்துவதே பொருள்; இரண்டு பொருட்கு இடை நின்ற சம்பந்தம் அல்லது உறவு என்பதை உணர்த்துவதே அதன்பொருள்.
சுத்தாத்வைதம் ஆண்டுக் கியைபில்லாத சடப்பிரபஞ்சத்தை வருவித்துரைத்தல் பொருந்தாமை அறிக . என்று எழுதி இந்நூற்பா மகாவாக்கியப் பொருளை உணர்த்தும் உட்கிடக்கையைக் கொண்டது என அமைத்துக் காட்டினார் . இவ்வமைப்புக்கு வழிநூலாசிரியர் கூற்றோ புடைநூலாசிரியர் கூற்றோ கைகொடுக்கவில்லை என்பதையும் நாம் உணரலாம் . 73 தத்துவமசி முதலிய மகாவாக்கியப் பொருளே ஈண்டு எடுத் தோதினார் என அமைத்தால் அவனே தானே ஆகிய அந்நெறி என்பதும் அப்பொருள் படவந்ததுதானே என்ற வினா அமையும் ஆதலின் கூறியது கூறல் குற்றம் வரும் என உடன்கொண்டு இப் பொருளையே பயன் ஒத்தினுள் அநுவதித்துக் கூறி அமைத்தார் என நிறுத்தி அது கூறியது கூறல் என்னும் குற்றம் நோக்கியதன்று ஒரு பயன் நோக்கி மீண்டும் எடுத்துக் கூறும் அநுவாத முறை எனவும் அமைத்துக் காட்டினார் . மகாவாக்கியப் பொருளே ஈண்டு எடுத்தோதினார் என்ற . கூற்றை வலிமைப்படுத்தியவுடன் பொருள்கள் நிற்கும் நிலைமை யின் அமைந்த உறவு முறையே இவண் விளக்கமுற்படுவது என்பது வெளிப்பட அமைந்த கருத்தாகின்றது . அடுத்து ' ஏகம் ஏவ அத்விதீயம் ' என்ற வாக்கியம் பொருள் இலக்கணம் கூற எழுந்ததாகவே அமைத்து அனைத்து ஆசாரியன் மார்களாலும் உரைகொள்ளப் பெறவும் அதற்கு மாறாக ' அத்து விதம் ' என்பது பொருளிலக்கணம் புலப்படுத்த வந்ததன்று பொருள் பிறவற்றோடு உறவு கொண்டு நின்ற நிலையைக் குறிக்க வந்த சொல்லே என அமைத்துக் காட்டும் வன்மை சிவஞான சுவாமிகளுக்கே அமைந்த தனித்திறன் . அத்வைதம் என்பதன் விளக்கம் அத்வைதம் பொருள் இலக்கணம் உணர்த்தும் சொல் என்பதே பொதுக்கொள்கை . ஆனால் பொருள் பிறவற்றோடு நின்ற உறவைக் குறிக்கும் சொல்லே அத்வைதம் என்பது சிவஞான முனிவர் கொள்கையாகிறது . இனி அத்துவிதம் என்னும் சொல்லுக்குச் சம்பந்த விசேடம் உணர்த்துவதே பொருள் ; இரண்டு பொருட்கு இடை நின்ற சம்பந்தம் அல்லது உறவு என்பதை உணர்த்துவதே அதன்பொருள் .