சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் பொருளின் உண்மை அல்லது பொருளின் இலக்கணம் உணர்த்து வது அச்சொற்குப் பொருளன்று என்பதைத் திட்டவட்டமாக அமைத்துக் கூறிவிடுகிறார். 74 மகா "சித்தாந்த சைவரின் கொள்கைப்படி, அத்துவிதம் என்னும் சொல்லுக்குப் பொருள் என்னையெனின், ''அது நீ ஆகின்றாய் எனவும் "அது நான் ஆகின்றேன்” எனவும், “அது இது ஆகின்றது" எனவும் மூவிடம் பற்றி நிகழும் "தத்துவமசி" முதலிய வாக்கியங்களைக் கேட்ட வழி, அது என்பது ஒரு பொருள் நீ என்பது ஒரு பொருள் ஆகலின், ஒரு பொருள் மற்றொரு பொருள் ஆமாறு யாங்ஙனம் என்னும் ஐயம் நீக்குதற்கு எழுந்ததாகலின், அது இது ஆதற்கு ஏதுவாய் அவ்விரண்டற்கும் உள்ள சம்பந்த விசேடம் உணர்த்துதலே அத்துவிதம் என்னும் சொற்குப் பொருள் என்றுகொள்க'' எனச் சிவஞான போத ஆறாம்நூற்பா இரண்டாம் அதிகரணத்தில் எழுதிக் காட்டினார். இனி, அத்துவிதம் என்ற சொல்லால் உணர்த்தப்பெறும் சம்பந்த விசேடம் என்னை? சம்பந்த விசேடப் பிரிவும் மறுப்பும் 1. ஆற்றுநீரும் கடல்நீரும் தம்மிற் சேர்ந்தாற் போலவும், குடத்தின் உள்ளிருக்கும் ஆகாயமும் மகா ஆகாயமும் தம்மிற் சேர்ந்தாற் போலவும் உள்ள ஐக்கிய சம்பந்தமா? அன்று. ஐக்கிய சம்பந்தத்தில் இரண்டும் ஒன்றாகவே ஆகிவிடு கிறது. அத்துவிதம் என்று உய்த்துணர வைத்ததன் நுட்பம் இல்லாமலே அமைந்துவிடுகிறது. 2. குண குணிகள் தம்முள் இணைந்து நின்றாற் போன்ற தாதான்மிய சம்பந்தமா? அன்று. முதல்வனைப் போலவே ஆன்மாவும் குணியாக நிற்ப தன்றி, முதல்வன் குணியாக, ஆன்மா குணமாக நிற்றல் இன்மை யின் அதுவும் பொருந்தாது. 3. விரலும் விரலும் சேர நின்றாற் போலும் சையோக சம்பந்தமா? சையோக சம்பந்தம் வியாப்பியப் பொருள்களுக் அமையும். வியாபகப் பொருள்கட்கு அமையாது.
சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் பொருளின் உண்மை அல்லது பொருளின் இலக்கணம் உணர்த்து வது அச்சொற்குப் பொருளன்று என்பதைத் திட்டவட்டமாக அமைத்துக் கூறிவிடுகிறார் . 74 மகா சித்தாந்த சைவரின் கொள்கைப்படி அத்துவிதம் என்னும் சொல்லுக்குப் பொருள் என்னையெனின் ' ' அது நீ ஆகின்றாய் எனவும் அது நான் ஆகின்றேன் எனவும் அது இது ஆகின்றது எனவும் மூவிடம் பற்றி நிகழும் தத்துவமசி முதலிய வாக்கியங்களைக் கேட்ட வழி அது என்பது ஒரு பொருள் நீ என்பது ஒரு பொருள் ஆகலின் ஒரு பொருள் மற்றொரு பொருள் ஆமாறு யாங்ஙனம் என்னும் ஐயம் நீக்குதற்கு எழுந்ததாகலின் அது இது ஆதற்கு ஏதுவாய் அவ்விரண்டற்கும் உள்ள சம்பந்த விசேடம் உணர்த்துதலே அத்துவிதம் என்னும் சொற்குப் பொருள் என்றுகொள்க ' ' எனச் சிவஞான போத ஆறாம்நூற்பா இரண்டாம் அதிகரணத்தில் எழுதிக் காட்டினார் . இனி அத்துவிதம் என்ற சொல்லால் உணர்த்தப்பெறும் சம்பந்த விசேடம் என்னை ? சம்பந்த விசேடப் பிரிவும் மறுப்பும் 1. ஆற்றுநீரும் கடல்நீரும் தம்மிற் சேர்ந்தாற் போலவும் குடத்தின் உள்ளிருக்கும் ஆகாயமும் மகா ஆகாயமும் தம்மிற் சேர்ந்தாற் போலவும் உள்ள ஐக்கிய சம்பந்தமா ? அன்று . ஐக்கிய சம்பந்தத்தில் இரண்டும் ஒன்றாகவே ஆகிவிடு கிறது . அத்துவிதம் என்று உய்த்துணர வைத்ததன் நுட்பம் இல்லாமலே அமைந்துவிடுகிறது . 2. குண குணிகள் தம்முள் இணைந்து நின்றாற் போன்ற தாதான்மிய சம்பந்தமா ? அன்று . முதல்வனைப் போலவே ஆன்மாவும் குணியாக நிற்ப தன்றி முதல்வன் குணியாக ஆன்மா குணமாக நிற்றல் இன்மை யின் அதுவும் பொருந்தாது . 3. விரலும் விரலும் சேர நின்றாற் போலும் சையோக சம்பந்தமா ? சையோக சம்பந்தம் வியாப்பியப் பொருள்களுக் அமையும் . வியாபகப் பொருள்கட்கு அமையாது .