சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

75 சுத்தாத்வைதம் 4. ஒருவாற்றான் இயைபுபடும் சொரூப் சம்பந்தமா? பொருந்தாது. ஆன்மாவானது சிவானந்தத்தை அனுபவித்தல் அமையாது. எனவே, அபேத சம்பந்தமாகிய ஐக்கியமும் இல்லை. பேத் சம்பந்தமாகிய சையோகமும் இல்லை. பேதாபேத சம்பந்தமாகிய தாதான்மியமும் இல்லை என எடுத்துக் காட்டி மறுத்தது சிவஞான முனிவரின் பணி. அத்வைதம் என்ற சம்பந்தம் 1. பொருள் ஒன்று; அது இருதன்மைப்பட்டு நிற்கும் குண குணி, அவயவம் அவயவி என்ற வகையில் ஒரே பொருள் இரு தன்மைப்பட்டு நிற்குமானால் அது தாதான்மியம். இருதன்மைப் பட்டு நின்றாலும் முன்னது வியாபகம் பின்னது வியாப்பியம். குணி வியாபகம், குணம் வியாப்பியம். இங்கே இரண்டு இலக்கணங்களும் அமையவேண்டும். ஒரே பொருள் இருதன்மைப்பட்டு நிற்கும்போது குணி, குணம், அவயவி அவயவம் என்ற வகையில் வேறுபட்டு நின்றாலும், வியாபக வியாப்பிய சம்பந்தமும் அமையவேண்டும். இது தாதான்மிய சம்பந்தம். 2. இரண்டு பொருள்கள், யாதேனும் ஒரு காரணத்தால் ஒன்றென ஒருதன்மைப்பட நிற்கும். இங்கேயும் வியாபக வியாப் பிய சம்பந்தம் அமைய வேண்டும். இதுவும் தாதான்மியமே ஆயினும் இருபொருள் ஒருதன்மைப்பட நின்றதாதலின் இந்த சம்பந்தமே அத்துவித சம்பந்தம். (அன்மைப் பொருள் பற்றி அத்துவிதம் என்னும் சொல்லால் உணர்த்தப்பட்ட சம்பந்தம்) பொருண்மையால் வேறு; கலப்பால் ஒன்று; உயிர்க்குயிராதல் தன்மையால் உடனாதல் என்ற மூன்றும் இயையநின்ற நிலையே, அன்மைப் பொருள் பற்றி வந்த அத்துவித சம்பந்தம். மூன்று நிலைகளுக்கும் வெவ்வேறு எடுத்துக்காட்டு அமைப்பதால் தம்முள் முரணுவ போலத் தோன்றும் என எடுத்துக்காட்டி, சிவஞான முனிவர் மூன்று ஆசாரியர்களும் எடுத்துக்காட்டும் ஒரே எடுத்துக் காட்டை எடுத்துக் காட்டுகின்றார். "காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்" இது, மெய்கண்டார், சிவஞானபோதம் பதினொன்றாம் நூற்பா
75 சுத்தாத்வைதம் 4. ஒருவாற்றான் இயைபுபடும் சொரூப் சம்பந்தமா ? பொருந்தாது . ஆன்மாவானது சிவானந்தத்தை அனுபவித்தல் அமையாது . எனவே அபேத சம்பந்தமாகிய ஐக்கியமும் இல்லை . பேத் சம்பந்தமாகிய சையோகமும் இல்லை . பேதாபேத சம்பந்தமாகிய தாதான்மியமும் இல்லை என எடுத்துக் காட்டி மறுத்தது சிவஞான முனிவரின் பணி . அத்வைதம் என்ற சம்பந்தம் 1. பொருள் ஒன்று ; அது இருதன்மைப்பட்டு நிற்கும் குண குணி அவயவம் அவயவி என்ற வகையில் ஒரே பொருள் இரு தன்மைப்பட்டு நிற்குமானால் அது தாதான்மியம் . இருதன்மைப் பட்டு நின்றாலும் முன்னது வியாபகம் பின்னது வியாப்பியம் . குணி வியாபகம் குணம் வியாப்பியம் . இங்கே இரண்டு இலக்கணங்களும் அமையவேண்டும் . ஒரே பொருள் இருதன்மைப்பட்டு நிற்கும்போது குணி குணம் அவயவி அவயவம் என்ற வகையில் வேறுபட்டு நின்றாலும் வியாபக வியாப்பிய சம்பந்தமும் அமையவேண்டும் . இது தாதான்மிய சம்பந்தம் . 2. இரண்டு பொருள்கள் யாதேனும் ஒரு காரணத்தால் ஒன்றென ஒருதன்மைப்பட நிற்கும் . இங்கேயும் வியாபக வியாப் பிய சம்பந்தம் அமைய வேண்டும் . இதுவும் தாதான்மியமே ஆயினும் இருபொருள் ஒருதன்மைப்பட நின்றதாதலின் இந்த சம்பந்தமே அத்துவித சம்பந்தம் . ( அன்மைப் பொருள் பற்றி அத்துவிதம் என்னும் சொல்லால் உணர்த்தப்பட்ட சம்பந்தம் ) பொருண்மையால் வேறு ; கலப்பால் ஒன்று ; உயிர்க்குயிராதல் தன்மையால் உடனாதல் என்ற மூன்றும் இயையநின்ற நிலையே அன்மைப் பொருள் பற்றி வந்த அத்துவித சம்பந்தம் . மூன்று நிலைகளுக்கும் வெவ்வேறு எடுத்துக்காட்டு அமைப்பதால் தம்முள் முரணுவ போலத் தோன்றும் என எடுத்துக்காட்டி சிவஞான முனிவர் மூன்று ஆசாரியர்களும் எடுத்துக்காட்டும் ஒரே எடுத்துக் காட்டை எடுத்துக் காட்டுகின்றார் . காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் இது மெய்கண்டார் சிவஞானபோதம் பதினொன்றாம் நூற்பா