சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

1. தோற்றுவாய் "கருணைபொழி திருமுகத்தில் திருநீற்று நுதலும் கண்டாரை வசப்படுத்தக் கனிந்தவா யழகும் பெருமைதரு துறவோடு பொறையுளத்திற் பொறுத்தே பிஞ்ஞகனார் மலர்த்தாள்கள் பிரியாத மனமும் மருவினர்கள் அகலாத ஞானமே வடிவாம் வளர்துறைசைச் சிவஞான மாமுனிவன் மலர்த்தாள் ஒருபொழுதும் நீங்காமல் எமதுளத்தில் சிரத்தில் ஓதிடுநா வினிலென்றும் உன்னிவைத்தே உரைப்பாம்" என்பது சிவஞானமுனிவரைப் பற்றி அவருடைய மாணாக்கர் அருளிய தோத்திரம். திருப்பதிகப் பெருவழி என்னும் பெரு நெறியை இவ்வுலகுக்கு முதன்மைப்படுத்தி அருளிய காரைக்காற் பேய் என்னும் புனிதவதி அம்மையார் இவ்வுலகில் நிலைநிறுத்திய பேரறம் ஒன்று உண்டு. அது அடியவர்க்கு அமுது செய்வித்தல் என்பதே. அடியார்க்கு அமுது செய்வித்தல் என்ற பெருநெறியை முன்னிறுத்திக் கொண்டு, அருள்நெறி எனப்பெறும் திருப்பதிகப் பெருநெறியை உலகுக் குணர்த்தி, அருளாட்சியில் முதற்பெருங் குருவாக நின்று, உலகமகாகுருவென இவ்வுலகில் முத்துச்சிவிகை யேறிச் செந்தமிழ்ச் சைவநெறி பரப்பிய ஞானத்தமிழாகரர் இவ்வுலக மக்களுக்கு வழங்கிய முதற்பெருஞ்சைவக் கொள்கை ஒன்று உண்டு.
1. தோற்றுவாய் கருணைபொழி திருமுகத்தில் திருநீற்று நுதலும் கண்டாரை வசப்படுத்தக் கனிந்தவா யழகும் பெருமைதரு துறவோடு பொறையுளத்திற் பொறுத்தே பிஞ்ஞகனார் மலர்த்தாள்கள் பிரியாத மனமும் மருவினர்கள் அகலாத ஞானமே வடிவாம் வளர்துறைசைச் சிவஞான மாமுனிவன் மலர்த்தாள் ஒருபொழுதும் நீங்காமல் எமதுளத்தில் சிரத்தில் ஓதிடுநா வினிலென்றும் உன்னிவைத்தே உரைப்பாம் என்பது சிவஞானமுனிவரைப் பற்றி அவருடைய மாணாக்கர் அருளிய தோத்திரம் . திருப்பதிகப் பெருவழி என்னும் பெரு நெறியை இவ்வுலகுக்கு முதன்மைப்படுத்தி அருளிய காரைக்காற் பேய் என்னும் புனிதவதி அம்மையார் இவ்வுலகில் நிலைநிறுத்திய பேரறம் ஒன்று உண்டு . அது அடியவர்க்கு அமுது செய்வித்தல் என்பதே . அடியார்க்கு அமுது செய்வித்தல் என்ற பெருநெறியை முன்னிறுத்திக் கொண்டு அருள்நெறி எனப்பெறும் திருப்பதிகப் பெருநெறியை உலகுக் குணர்த்தி அருளாட்சியில் முதற்பெருங் குருவாக நின்று உலகமகாகுருவென இவ்வுலகில் முத்துச்சிவிகை யேறிச் செந்தமிழ்ச் சைவநெறி பரப்பிய ஞானத்தமிழாகரர் இவ்வுலக மக்களுக்கு வழங்கிய முதற்பெருஞ்சைவக் கொள்கை ஒன்று உண்டு .