சிவஞான முனிவர் நோக்கில் சைவ சித்தாந்தம்

7. இறுவாய் ‘சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம்’ என்ற தலைப்பில், சிவஞான முனிவரின் அருட்கொடைகளாக ஐந்து செய்திகள் முன்னுள்ள தலைப்புக்களில் அமைத்து ஆய்வு செய்யப் பெற்றன. உலகளாவிய பொதுமை என்ற அடிப்படையிலும், உலகத் தத்துவ அரங்குக்குச் சிவஞானமுனிவர் சித்தாந்த சைவத்தின் வழி நின்று வழங்கிய கொடைகள் என்ற சிறப்பாலும், உலகத் தமிழ் இயக்கத்தின் கொள்கைக்கு அரண் செய்யும் வகையில் அவ்வைந் தும் ஆய்வுப் பொருளாயின. அறிவுப்பிண்டம் என நின்ற உயிர் இந்த உலகின் எந்தப் பகுதியில் இருப்பினும், அது சிவஞானமுனிவர் என்னும் அறிவியல் மூச்சுக்காற்றால் வாழ்ந்ததாக, வாழ்வதாகத் தான் அமையும். சிவஞான முனிவரின் சாயல் படாத, திருத்தம் பெறாத, வலிமை வாய்ந்த வாழ்வியற்பாதை அமைத்துக் கொடுக்கப் பெறாத அறி வியற் கூறே இல்லை எனலாம். “கலைகள் எல்லாம் சிவஞான முனிவராகத் தோன்றின போலும்! தருக்கமும், வியாகரணமும், இலக்கியமும், இலக்கண மும் தமிழ்ச் சிவஞான முனிவருக்குப் பணியாட்கள் ஆகித் துணை புரியத் தவம் கிடந்தனவோ! என்னவோ தெரியவில்லை.'” “மெய்கண்டார் அருளிய சிவஞான போதத்தின் அக(உள்ள)த் தைத் திறந்து காட்டவல்ல திறவு சிவஞான முனிவர் உரையே. சிவஞான முனிவர் நுண்உடல் கொண்டு மெய்கண்டாருடன் பேசிப் பேசி உரை வரைந்தனரோ என்று நினைக்குமாறு அவர் தம் உரை அமைந்து இருக்கிறது‘ "சிவஞான முனிவர் வடமொழிக் கடலையும் தென் மொழிக் கடலையும் உண்ட பெருங்கொண்டல் (மேகம்). அக்கொண்டல் பொழிந்த மழையின் தேக்கம் சிவஞான பாடியம். சிவஞான முனி வரது தத்துவ ஆராய்ச்சி நுட்பத்தை நோக்கும் போது நீலகண்ட ரும் சங்கரரும் இராமானுசரும் மத்துவரும் ஓர் உருக்கொண்டு சிவஞான முனிவராக வந்தனரோ? என்றும், அவர் தம் தமிழ் நடையை நோக்கும்போது, நக்கீரரும் இளம்பூரணரும் பரிமேலழ கரும் நச்சினார்க்கினியரும் ஓர் உரூக்கொண்டு அவராகப் போந் தனரோ? என்றும் அறிஞர் கருதுதற்கு இடன் உண்டாகிறது.
7. இறுவாய் சிவஞான முனிவர் நோக்கில் சைவசித்தாந்தம் என்ற தலைப்பில் சிவஞான முனிவரின் அருட்கொடைகளாக ஐந்து செய்திகள் முன்னுள்ள தலைப்புக்களில் அமைத்து ஆய்வு செய்யப் பெற்றன . உலகளாவிய பொதுமை என்ற அடிப்படையிலும் உலகத் தத்துவ அரங்குக்குச் சிவஞானமுனிவர் சித்தாந்த சைவத்தின் வழி நின்று வழங்கிய கொடைகள் என்ற சிறப்பாலும் உலகத் தமிழ் இயக்கத்தின் கொள்கைக்கு அரண் செய்யும் வகையில் அவ்வைந் தும் ஆய்வுப் பொருளாயின . அறிவுப்பிண்டம் என நின்ற உயிர் இந்த உலகின் எந்தப் பகுதியில் இருப்பினும் அது சிவஞானமுனிவர் என்னும் அறிவியல் மூச்சுக்காற்றால் வாழ்ந்ததாக வாழ்வதாகத் தான் அமையும் . சிவஞான முனிவரின் சாயல் படாத திருத்தம் பெறாத வலிமை வாய்ந்த வாழ்வியற்பாதை அமைத்துக் கொடுக்கப் பெறாத அறி வியற் கூறே இல்லை எனலாம் . கலைகள் எல்லாம் சிவஞான முனிவராகத் தோன்றின போலும் ! தருக்கமும் வியாகரணமும் இலக்கியமும் இலக்கண மும் தமிழ்ச் சிவஞான முனிவருக்குப் பணியாட்கள் ஆகித் துணை புரியத் தவம் கிடந்தனவோ ! என்னவோ தெரியவில்லை . ' மெய்கண்டார் அருளிய சிவஞான போதத்தின் அக ( உள்ள ) த் தைத் திறந்து காட்டவல்ல திறவு சிவஞான முனிவர் உரையே . சிவஞான முனிவர் நுண்உடல் கொண்டு மெய்கண்டாருடன் பேசிப் பேசி உரை வரைந்தனரோ என்று நினைக்குமாறு அவர் தம் உரை அமைந்து இருக்கிறது சிவஞான முனிவர் வடமொழிக் கடலையும் தென் மொழிக் கடலையும் உண்ட பெருங்கொண்டல் ( மேகம் ) . அக்கொண்டல் பொழிந்த மழையின் தேக்கம் சிவஞான பாடியம் . சிவஞான முனி வரது தத்துவ ஆராய்ச்சி நுட்பத்தை நோக்கும் போது நீலகண்ட ரும் சங்கரரும் இராமானுசரும் மத்துவரும் ஓர் உருக்கொண்டு சிவஞான முனிவராக வந்தனரோ ? என்றும் அவர் தம் தமிழ் நடையை நோக்கும்போது நக்கீரரும் இளம்பூரணரும் பரிமேலழ கரும் நச்சினார்க்கினியரும் ஓர் உரூக்கொண்டு அவராகப் போந் தனரோ ? என்றும் அறிஞர் கருதுதற்கு இடன் உண்டாகிறது .